Skip to main content

வாகன சோதனையில் காவல்துறையினர் அத்துமீறல்! - இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு!

Published on 12/09/2018 | Edited on 12/09/2018
Vehicle inspection


காவல்துறையினரின் அத்துமீறிய வாகன சோதனையின் போது, இருசக்கர வாகனத்தில் வந்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டதால் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யகோரி சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குமாராட்சி காவல் நிலைய எல்லலைக்குட்பட்ட வீரநத்தம் என்ற இடத்தில் குமராட்சி காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காட்டுமன்னார்கோவிலை அடுத்த வீராண நல்லூர் கிரமத்தை சேர்ந்த குணசேகரன், பொன்னம்பலம் ஆகியோர் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளனர். அப்போது வாகனத்தை சோதனை செய்து கொண்டிருந்த காவலர்கள் இவர்கள் வாகனத்தை நிறுத்துவற்குள், வண்டியை ஓட்டிவந்தவரின் கையை பிடித்து இழுத்துள்ளார்.

இதில் வாகனத்தில் வந்த இருவரும், அவர்கள் ஓட்டிவந்த இருசக்கர வாகனமும் கீழே விழுந்ததில் அவர்கள் பலத்த காயம் அடைந்தனர். உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவர்களை மீட்டு காட்டுமன்னார்கோயில் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். காயம் பட்டவர்களில் ஒருவருக்கு பலத்த எலும்பு முறிவும், மற்றொருவருக்கு அடி பலமாக பட்டதில் காதில் இருந்து ரத்தம் வந்துகொண்டிருந்தது. மேலும் காதில் இருந்து ரத்தம் வந்தவருக்கு மேல்சிகிச்சைக்காக சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
 

Vehicle inspection


இது குறித்து பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பிரகாஷ், மார்க்சிஸ்ட் கட்சியின் காட்டுமன்னார்கோயில் வட்டசெயலாளர் இளங்கோ மற்றும் கட்சியினர் சம்பவத்தை அறிந்து காட்டுமன்னார்கோவில் அரசு மருத்துவமனைக்கு வந்து விசாரித்துக் கொண்டு இருக்கையில், அப்போது அங்கு இருந்த குமராட்சி காவலர் ஒருவர் மருத்துவமனையில் உள்ள முதல் தகவல் அறிக்கை ரசீதை மருத்துவர் அனுமதி இல்லாமல் கிழித்து விட்டு சென்றார்.
 

Vehicle inspection


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து விதோச மாவட்ட செயலாளர் பிரகாஷ் தலைமையில் திங்கள் இரவு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து காவல்துறை ஆய்வாளர் ஷீயாம்சுந்தர் சம்பந்தபட்ட காவலர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கிறேன் என்று உறுதி கூறினார். இதனை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக இரவு நேரத்தில் விளக்கிகொள்ளப்பட்டது.

இந்நிலையில் செவ்வாய் காலை சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்யவேண்டும் என்று மார்க்சிஸ்ட் கட்சியினர் மற்றும் விபத்துக்குள்ளானவர்களின் உறவினர்கள் குமராட்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்கு பதிவது குறித்து காவல்துறை ஆய்வாளர் சரியான பதில் கூறாமல் மழுப்பலாக பேசியுள்ளார். பின்னர் ஆய்வாளரின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அனைவரும் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பந்தபட்ட காவலர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோட்டாட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

அனைத்து ஏற்பாடுகளும் தயார்; வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பப்பட்ட ஈவிஎம்

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
All arrangements are ready; EVM sent to polling stations

தமிழகத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பாராளுமன்றத் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் அரசியல் கட்சியினர், சுயேட்சைகள் என 31 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். நேற்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்ந்தது. ஈரோடு மாவட்டத்தில் 8 சட்டசபை தொகுதியில் 198 மண்டலங்களில் 2,222 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஈரோடு பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, காங்கேயம் தாராபுரம் குமாரபாளையம் ஆகிய சட்டசபை தொகுதிகளில் 15 லட்சத்து 38 ஆயிரத்து 778 வாக்காளர்கள் உள்ளனர்.

தேர்தல் பாதுகாப்பு பணியில் 2,325 மத்திய பாதுகாப்பு படையினர், 1,571 உள்ளூர் போலீசார் என 3,896 பேர் ஈடுபடுகின்றனர். மாவட்டத்தில் 5 மாநில சோதனை சாவடி உள்பட 12 சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தி உள்ளனர். 191 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். ஈரோடு பாராளுமன்றத் தொகுதிக்குள் 1,112 வாக்குச்சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இப்படி வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்படுகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து இன்று காலை முதல் அந்தந்த தாலுகா அலுவலகங்களில் இருந்து வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கட்டுப்பாட்டு எந்திரம், வி வி பேட் மற்றும் வாக்குச் சாவடிக்குத் தேவையான பயன்பாட்டுப் பொருட்களைத் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் லாரி மற்றும் வேன்களில் மண்டல குழுவினர் தலைமையில் பொருட்கள் கருவிகள் எடுத்துச் செல்லப்பட்டன. இந்த வாகனங்களில் ஜிபிஆர்எஸ் கருவி பொருத்தப்பட்டு இருந்தது. மேலும் வாக்குச்சாவடிகளில் 10,970  ஆசிரியர்கள், அரசு அலுவலர்கள் பணி செய்ய உள்ளனர். இது தவிர ஒருங்கிணைப்பு பணியில் 2,500 பேர் ஈடுபடுத்தப்படுகின்றனர். தேர்தல் பணியில் ஈடுபடுவோர் ஏற்கெனவே மூன்று கட்ட பயிற்சி பெற்ற பயிற்சி மையம் சென்று ஓட்டு சாவடி பணி நியமன ஆணையைப் பெற்று இன்று மாலைக்குள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி மையத்துக்கு சென்று விடுவார்கள். ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் முதியோர், மாற்றுத்திறனாளிக்காக சக்கர நாற்காலி, சாய்வு தளம், நிழல் வசதி, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட அனைத்தும் ஏற்படுத்தி தயார் நிலையில் உள்ளனர். தற்போது மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் வசதிக்காக சாமியானா பந்தலும் போடப்பட்டுள்ளது.

நாளை காலை சரியாக 7 மணிக்கு வாக்குப்பதிவு  தொடங்குகிறது. வாக்கு பதிவு செய்ய வருபவர்கள் தங்களது 12 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காட்டி வாக்கு பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கும் முன்னதாக காலை 5:30 மணிக்கு மாதிரி வாக்குப்பதிவு நடத்தப்படும். ஈரோடு மாவட்டம் பர்கூர் , தாளவாடி, கடம்பூர் ஆகிய மலைப்பகுதி வாக்குச்சாவடிகளில் தொலைபேசி, இன்டர்நெட் வசதி இல்லை. அங்கு வனத்துறையினரின் மைக் மூலம் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும் ஈரோடு மாவட்டம் மலைப்பகுதியில் 120 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ளன. வெப் கேமரா வசதி செய்ய முடியாத வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு பணிகள் முழுமையாக வீடியோவாக பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.