Skip to main content

"போலி வழக்குகளில் பா.ஜ.க. தொண்டர்கள் கைது" - அண்ணாமலை பேட்டி

Published on 21/09/2022 | Edited on 21/09/2022

 

"BJP activists arrested in fake cases" - Annamalai interview!


மதுரை சர்வதேச விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, "தமிழகம் முழுவதும் போலி வழக்குகள் பதியப்பட்டு, பா.ஜ.க. தொண்டர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆ.ராசாவுக்கு எதிராக மக்களிடம் கையெழுத்து வாங்கும் பணி நடைபெற்று வருகிறது. ஆ.ராசாவுக்கு எதிராக 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இதுவரை கையெழுத்திட்டுள்ளனர். ஆ.ராசா கருத்து பிளவை ஏற்படுத்தாது என்கிறார்கள், நாங்கள் அதை கண்டித்து வெளியிடும் கருத்தால் பிளவு ஏற்படும் என்கிறார்கள். 

 

ஆ.ராசாவுக்கு ஆதரவு தெரிவித்து தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள் யாரும் பேசவில்லை. சர்ச்சைப் பேச்சுகள் மூலம் பிரச்சனைகளைத் திசை திருப்ப தி.மு.க. முயற்சி செய்கிறது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல ஆ.ராசா பேசி வருகிறார்" எனத் தெரிவித்துள்ளார். 

 

சார்ந்த செய்திகள்