Skip to main content

பா.ஜ.கவில் இணையும் 'பிட்டு பட' இயக்குனர் சந்தோஷ்?  

Published on 13/10/2020 | Edited on 13/10/2020
 'Bittu Pada' director Santosh joins BJP??

 

'ஹர ஹர மகாதேவகி', 'இருட்டு அறையில் முரட்டு குத்து' உள்ளிட்ட அடல்ட் காமெடி படங்களை எடுத்தவர் இயக்குனர் சந்தோஷ். அவருடைய அடுத்த படமும் அடல்ட் காமெடி என்னும் ஜானரிலேயே எடுக்கப்பட்டுள்ளது. இது பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. 'இரண்டாம் குத்து' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீஸர் வெளியாகி பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

டீஸரில், மிகவும் மோசமான கவர்ச்சி காட்சிகள் மற்றும் டபுள் மீனிங் வசனங்கள் இருப்பதால் பலரும் இந்த படம் வெளியிடக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த படத்திற்கு கடும் கண்டனத்தை இயக்குனர் பாரதிராஜா பதிவு செய்துள்ளார். அதேபோல் அரசியல் கட்சித் தலைவர்களும் இதுபோன்று கண்ணியக் குறைவான காட்சிகள் இடம் பெறும் சமூக சீரழிவை ஏற்படுத்தும் படங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என தெரிவித்து வருகின்றனர். அதேபோல் கோபிநாத் என்பவர் சென்னை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மனுவில் இப்படத்தின் டீசர், போஸ்டர் என அனைத்தும் பாலியல் உணர்வை தூண்டும் விதமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஏற்கனவே ஆசிபா முதல் ஹத்ராஸ் சம்பவம் வரை நடந்தேறிய பாலியல் குற்றங்களால் சமூகத்தில் பெண்களுக்கு என்ன மாதிரியான பாதுகாப்பு இருக்கிறது என்கிற கேள்வியே தற்பொழுது கேள்விக்குறியாகவே இருக்கும் நிலையில், இதுபோன்ற சமூக சீரழிவை ஏற்படுத்துகின்ற, மோசமான வசனங்களை கொண்ட திரைப்படங்கள் மேலும் பாதுகாப்பற்ற நிலையை  ஊக்குவிப்பதையே மேற்கொள்ளும் என்ற கருத்து மக்களிடம் மிகச் சாதாரணமாகவே எழுந்து விட்டது. இதனால் அனைத்து தரப்பில் இருந்தும் இந்த படத்திற்கு வலுவான கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

சில இடங்களில் இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தின் இயக்குனர் சந்தோஷ், தொடர்ந்து அவர் எடுத்துள்ள படங்கள் அனைத்தும் இதே மாதிரியான இரட்டை அர்த்த வசனங்கள், மோசமான காட்சிகள் இடம் பெற்றிருப்பதால் 'பிட்டு பட' இயக்குனர் என்றே அடையாளம் காணப்படுகிறார். இந்நிலையில் பிட்டு பட இயக்குனரான சந்தோஷ் கண்டன குரல்களுக்கிடையே  பாதுகாப்பிற்காக பாஜகவில்  சேர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தற்பொழுது யார் வந்தாலும் சேர்த்துக் கொள்ளும் எண்ணத்தில் தான் தமிழக பா.ஜ.க இருக்கிறது. அண்மையில் ரவுடி ஒருவர் கூட பா.ஜ.கவில் இணைய வந்திருந்த நேரத்தில் போலீஸ் வேனை பார்த்ததும் தப்பியோடிய சம்பவம் கூட நிகழ்ந்திருக்கிறது. இந்நிலையில் 'பிட்டு பட' இயக்குனர் சந்தோஷ் பா.ஜ.கவில் இணைய பேச்சுவார்த்தைகள் நடத்திக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திடீரென மயங்கி விழுந்த நிதின் கட்கரி; பிரச்சாரத்தில் பரபரப்பு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Nitin Gadkari suddenly fainted on the campaign platform

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தைப் பொருத்தவரை ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி 5 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், வரும் 26 ஆம் தேதி  இரண்டாம் கட்டமாக 8 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. யவத்மால் தொகுதியில் பாஜக கூட்டணி சார்பில் ஏக்நாத் ஷிண்டே சிவசேனா கட்சியின் வேட்பாளர் ராஜஸ்ரீ பாட்டில் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் புசாத் நகரில் ராஜஸ்ரீ பாட்டிலை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கலந்துகொண்டார். அப்போது பிரச்சார மேடையில் திடிரென நிதின் கட்கரி மயங்கி விழுந்தார். உடனடியாக அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு சிறிது நேரம் இடைவெளிக்கு பிறகு மீண்டும் பழைய நிலைமைக்கு திரும்பினார். பின்பு பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய நிதின் கட்கரி ராஜஸ்ரீ பாட்டிலுக்கு வாக்கு சேகரித்தார்.

இந்தநிலையில், வெப்பம் காரணமாக உடல்நிலை பாதிப்பு எற்பட்டது என்றும், தற்போது நலமாக இருப்பதாகவும் கூறியுள்ள நிதின் கட்கரி உங்கள் அன்பிற்கு நன்றி என்று என்று தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Next Story

ரூ. 4 கோடி பறிமுதல் விவகாரம்; வெளியான பகீர் வாக்குமூலம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Rs 4 crore confiscation issue confession

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்த பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

மேலும் இந்த பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தம் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரை அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” என தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை முடிவு செய்துள்ளது.