Skip to main content

சிறுவன் சுஜித் மரணம் குறித்து பிக் பாஸ் கவினின் பதிவு!

Published on 30/10/2019 | Edited on 30/10/2019

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆழ்துளை கிணற்றில் விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் நான்கு நாட்களுக்குப் பிறகு உயிரிழந்த நிலையில் (அக்டோபர் 29) மீட்கப்பட்டான். சுஜித்தின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு, நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனையடுத்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் சுஜித்தின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
 

kavin

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on


மேலும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழக அரசு சார்பில் 10 இலட்சமும், அதிமுக சார்பில் 10 இலட்சமும் வழங்கினார். துணை முதல்வர் பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின், கட்சி சார்பில் 10 இலட்சம் வாங்கினார், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, 1 இலட்சம் வழங்கினார். இந்த நிலையில் பிக் பாஸ் சீசன் 3இல் 16 போட்டியாளர்களில் ஒருவராக இருந்த கவின் சுஜித்தின் மரணம் குறித்து தனது சமூகவலைதள பக்கத்தில் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில், wearesorrysujith, நியாயமே இல்லாத மரணம் என்று பதிவிட்டுள்ளார். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனவை நோக்கி ஓடும் ‘ஸ்டார்’ கவின்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kavin star movie trailer released

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார் கவின். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 4 பாடல்கள் முன்னரே அடுத்தடுத்து வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையடுத்து இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர், வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ளார்” என இயக்குநர் இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகனாக ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடும் இளைஞன், வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான், அதை எதிர்கொண்டு எப்படி ஹீரோவாக மாறினான் என்பதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து விரிவாக விவரிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. கவின் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.