Skip to main content

ஓடும் படகில் மாணவர்கள் சிலம்பம் சுற்றி விழிப்புணர்வு

Published on 30/11/2022 | Edited on 30/11/2022

 

d

 

சிதம்பரம் அருகே டி எஸ் பேட்டை கிராமத்தில் வசிக்கும் மாணவர் அதியமான் வயது 12. இவர் அதே பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு பயின்று வருகிறார். அதேபோல் ஆதி ஸ்ரீ வயது 10,  5  வகுப்பு பயின்று வருகின்றனர். இவர்கள் சிறு வயது முதல் சிலம்ப பயிற்சி கற்று வருகின்றனர்.

 

இந்நிலையில் தமிழக முதல்வர் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் மாணவர்கள் இருவரும் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் டி எஸ் பேட்டையை ஒட்டியுள்ள சேற்றுக் கொள்ளிடம் ஆற்றில், ஓடும் படகில் 2 மணி நேரம் 10 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் சுற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இது அந்தப் பகுதியிலிருந்த பொதுமக்கள் மற்றும் மீனவர்களைக் கவர்ந்தது.

 

 

சார்ந்த செய்திகள்