Skip to main content

"வெற்றிமாறன் ஆய்வு பண்ணாமயா எடுப்பாரு... அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க"... அருங்குணம் விநாயகம் அதிரடி!

Published on 23/10/2019 | Edited on 23/10/2019

வெற்றிமாறன் மற்றும் தனுஷ் கூட்டணியில் நான்காவது படமாக உருவாகி அக்டோபர் நான்காம் தேதி வெளியான படம் அசுரன். கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவான படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் ரிலீஸாகி விமர்சன ரீதியாகவும், பார்வையாளர்களையும் கவர்ந்தது. தனுஷின் படம் வணிக ரீதியாக முதன் முதலில் ரூ.100 கோடி வசூல் ஈட்டிய படம் அசுரன் என்று புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த படம் பூமணி எழுதிய வெக்கை நாவலை மையமாக வைத்து எடுத்த படமாகும். இந்த படத்தில் வரும் முக்கிய கருத்தான உழைக்கும் மக்களிடம் இருந்து நிலத்தை பறிப்பது மற்றும் தாழ்த்தப்பட்டவர்கள் செருப்பு போட்டு போகக் கூடாது என்றும், இது தொடர்பான கேள்வி நாகர் சேனை அமைப்பின் தலைவர் அருங்குணம் விநாயகத்திடம் கேட்கப்பட்டது. இந்த கேள்வி குறித்து கூறிய அவர், சமீபத்தில் அசுரன் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் எனக்கு வந்தன. 

 

arungunam



பஞ்சமி நிலத்தை பற்றி தாழ்த்தப்பட்டவர்கள் பேசுவதை விட, அவர்களின் வரலாறு பேசும் போது தான் பெரிய உணர்ச்சிகரமாக இருக்கும் என்பதை பார்க்கிறேன் அதை வரவேற்கிறேன் என்று தெரிவித்தார். மேலும் தாழ்த்தப்பட்ட மக்கள் இப்பவும் செருப்பு போட்டு போகக் கூடாது என்று நிறைய கிராமத்தில் உள்ளது. இந்த மாதிரியான காட்சிகள் இதுவரை யாரும் நேரடியாக எடுக்கவில்லை. இந்த படத்தில் தான் நேரடியாக எடுத்துள்ளனர் அதற்கு அசுரன் படத்திற்கு நன்றி என்று கூறினார். இன்னைக்கும் தென் மாவட்டங்களில் நிறைய ஊர்களில் இப்படி இருக்கிறது. இதை யாரும் கேட்க முடியாது. ஏனென்றால் அதற்கு அரசியவாதி முழு ஒத்துழைப்பு கொடுக்கிறான் என்றார். இந்த மாதிரி சம்பவங்கள் ஒரு ஊர்லயா நடக்குது, இது மாதிரி 5000 கிராமங்களில் நடக்குது என்று கூறினார் . 

 

vetrimaran



மேலும் நான் படம் எடுத்திருந்த கூட மிகைப்படுத்தி எடுத்து விட்டேனு சொல்லலாம், இயக்குனர் வெற்றிமாறனுக்கு தெரியாத எவ்வளவு கள ஆய்வு செய்து எடுத்திருப்பார். அவர் 1980இல் நடந்த விஷயங்களை சொல்லவில்லை இன்றைக்கு நடக்கிற விஷயத்தை தான் சொல்லிருக்கிறார் என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், சோசியல் மீடியாவில் பாத்தீங்கன்னா ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி சைக்கிள்ல போன ஒரு பையன் தலையில் செருப்பை எடுத்து வைத்து அடித்த காட்சி இருக்கிறது. அதனால வெற்றிமாறன் இன்னைக்கு நடைபெற விஷயத்தை தான் எடுத்துள்ளார் என்றும் கூறினார். அதோடு இத பத்தி யாருகிட்ட சொல்ல முடியும். செருப்பு எடுத்து அடித்தவனோட அண்ணன், அவங்க உறவினர்கள் தான் எம்.பி, எம்.எல்.ஏ.வாக இருக்கான், அதிகாரத்தில் இருக்கான் அப்புறம் எப்படி நடவடிக்கை எடுப்பாங்க என்றும் கூறினார்.       

 

சார்ந்த செய்திகள்

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

18 மாவோயிஸ்டுகள் பலி; சத்தீஸ்கரில் பரபரப்பு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
nn

சத்தீஸ்கர் மாநிலத்தில் 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

சத்தீஸ்கர் மாநிலம் கன்கர் மாவட்டத்தில் நக்சலைட்டுகள் மற்றும் பாதுகாப்பு படைகளுக்கு இடையே துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் மொத்தமாக 18 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இந்தத் தாக்குதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த மூன்று வீரர்கள் படுகாயம் அடைந்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

மொத்தமாக 18 மாவோயிஸ்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. அவர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள், மெஷின் கன்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒரே ஒரு எல்லை பாதுகாப்பு வீரரின் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருப்பதாகவும் ஆனால் உயிருக்கு எந்தவிதமான சேதம் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் நேரத்திற்கு முன்பாக நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் 18 மாவோயிஸ்டுகள் கொலை செய்யப்பட்டிருப்பது முக்கிய சம்பவமாக பார்க்கப்படுகிறது.  நக்சலைட்டுகள் ஆதிக்கம்  அதிகம் இருக்கும் சத்தீஸ்கரில் இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.