Published on 20/04/2019 | Edited on 20/04/2019
சென்னை தண்டையார்பேட்டையில் குடியிருப்பு பகுதியில் மது விற்பவரை கைது செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தண்டையார் பேட்டை பகுதியில் சாந்தி என்பவருக்கு ஆதரவாக போலீசார் செயல்படுவதாகவும், இந்த மது விற்பனை குறித்து புகார் செய்தால் தங்கள் தரப்பின் மீது புகார் பதிவுசெய்வதாகவும் கூறி மது விற்கும் சாந்தி என்ற அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் கிராஸ் ரோட்டில் ஒரு மணி நேரமாக சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.