ஆர்.கே.நகரில் ’நாம் மனிதர்’கட்சி போட்டி
ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் டிசம்பர் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில், 'நாம் மனிதர்' கட்சியின் சார்பில் ரெ.ஜோதிகுமார் போட்டியிடுகிறார். குடிநீர், குப்பைகளை அகற்றுதல், கழிவு நீர் வடிகால்கள் அமைப்பது, கொசுத்தொல்லைகளை அகற்றுவது உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை ஜோதிக்குமார் அளித்துள்ளார்.
படம்: அசோக்குமார்