ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: திறந்த ஜீப்பில் முதல்வர், துணை முதல்வர் பிரச்சாரம்!
ஆர்.கே.நகர் தொகுதியில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று களத்தில் இறங்கினர். கரகாட்டம், தாரைதப்பட்டையுடன் முதல்வரும், துணை முதல்வரும் பிரசாரத்தில் இறங்கியுள்ளதால் ஆர்.கே.நகர் தொகுதி கலகலப்புடன் காணப்படுகிறது.
ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனனுக்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் இன்று காலை ஆர்.கே.நகர் தொகுதியில் களத்தில் இறங்கினர். கொருக்குப்பேட்டையில் உள்ள கோயிலில் முதல்வர், துணை முதல்வருக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தரிசனத்துக்குப் பின்னர் இவர்கள் பிரசாரத்தைத் தொடங்கினர். திறந்த ஜீப்பில் முதல்வர், துணை முதல்வர் ஆர்.கே.நகர் வேட்பாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
படங்கள் - ஸ்டாலின்