Skip to main content

திண்டுக்கல்லில் சசிகலாவுக்காக சிறப்புப் பூஜையுடன் அன்னதானம்!

Published on 22/01/2021 | Edited on 22/01/2021

 

Annathanam with special pooja for Sasikala in Dindigul!

 

சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்ட சசிகலா வருகிற 27-ம் தேதி விடுதலையாக இருக்கிறார். அவரின் விடுதலையை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.

 

இந்நிலையில் சசிகலாவுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அவருக்கு கரோனா தொற்றும் உறுதி செய்யப்பட்டுள்ள செய்தி, கட்சிப் பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

 

Annathanam with special pooja for Sasikala in Dindigul!

 

இந்நிலையில் சசிகலா விரைவில் குணமடைய வேண்டி திண்டுக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் ராமுதேவர் என்பவர் திண்டுக்கல்லில் உள்ள கோட்டைமாரியம்மன் கோவிலில் சிறப்புப் பூஜை செய்தார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, ஆத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் பெரும் திரளாகச் சென்று  சசிகலா பெயரில் சிறப்புப் பூஜை செய்து செய்தனர். அதுபோல் சில பகுதிகளில் சசிகலாவுக்காக அன்னதானமும் வழங்கினார்கள்.

 

Annathanam with special pooja for Sasikala in Dindigul!

 

அதைத்தொடர்ந்து மேற்கு மாவட்டத்திலும் சசிகலாவுக்காக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும், தொண்டர்களும் சசிகலாவுக்காக  சிறப்புப் பூஜை செய்தும் அன்னதானம் வழங்கினார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்