நடைபெறுகிற சட்டமன்ற இடைத்தேர்தலில் சூலூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கந்தசாமியை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மாலை முதல் இரவு 10 மணி வரை தொகுதி முழுக்க பிரச்சாரம் செய்தார்.

முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் அமைச்சர் வேலுமணி கோயம்புத்தூரில் பாஜக வலுவாக உள்ளது. உங்களது பிரச்சாரத்தில் பாஜக தலைவர்களும் கலந்து கொண்டுபேச விரும்புகிறார்கள் என வேலுமணி முதல்வர் எடப்பாடி யிடம் கூற, எடப்பாடி பழனிச்சாமி யோ ஐயய்யோ வேண்டவே வேண்டாம் குறிப்பாக கோவையில் பாஜககார்களை வைத்து நாம் பிரச்சாரம் செய்தால் அது மக்கள் மத்தியில் எதிர்மறையாக போகும்.
நடைபெறுகிற இடைத்தேர்தலில் நான் பெரிதும் எதிர்பார்ப்பது சூலூர் தொகுதியை ஆகவே பிஜேபி காரங்க யாரும் இங்கு வரக்கூடாது என அமைச்சர் வேலுமணி வரக் கூடாது என அமைச்சர் வேலுமணியிடம் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருக்கிறார் அதன் பிறகு மாலை 4 மணிக்கு தொடங்கிய பிரச்சார பயணம் இரவு 10 மணிக்கு முடிந்தது இந்த பிரச்சார பயணத்தில் கூட்டணிக் கட்சிகள் அதன் நிர்வாகிகள் யாரையும் அழைக்கவில்லை ஒவ்வொரு இடங்களிலும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி யே பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாஜக அதிமுக கூட்டணி இருந்தாலும் கோயமுத்தூரில் குறிப்பாக தொழில் பகுதியான இங்கு பாஜகவிற்கு எதிரான மக்கள் மனநிலை உள்ளது என்பதை தெரிந்து பாஜகவை மேடையில் ஏற்றாமல் தான் மட்டுமே பேசினார் முதல்வர் எடப்பாடி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.