Skip to main content

"ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மை கல்லூரி தொடங்கப்படும்"- அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு!

Published on 17/08/2022 | Edited on 17/08/2022

 

 

"Agriculture college will be started in Ottanchatra"- Minister Chakrapani's announcement!

 

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் தொகுதிக்குட்பட்ட கள்ளிமந்தையம் திருப்பதி அருள் நெறி மேல்நிலைப்பள்ளி, கொத்தயம் ஜே.ஆர்.சி.மேல்நிலைப்பள்ளி, மஞ்சநாயக்கன்பட்டி அரசு மேல் நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, சத்திரப்பட்டி சீனிவாசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி, தாளையூத்து அரசு மேல்நிலைப்பள்ளி, கீரனூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கொக்கரக்கல்வலசு அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 3,330 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், மரக்கன்றுகளை வழங்கியும் மற்றும் கோரிக்கடவில் கலைஞர் வணிக வளாக கட்டிடத்தையும் உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி திறந்து வைத்தார்.

 

விழாவில் பேசிய அமைச்சர் சக்கரபாணி, "தமிழக அரசு மாணவர்களின் கல்வியை மேம்படுத்துவதற்காக ரூபாய் 37 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கியுள்ளது. இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட பல்வேறு வகையான திட்டங்களை அரசு பள்ளி மாணவர்களுக்காக செய்து, இளைஞர்களின் வேலை வாய்ப்பை பெருக்கும் வகையில், நான் முதல்வன் திட்டமும் துவக்கப்பட்டுள்ளது. ஆட்சி அமைந்த 14 மாதங்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 அரசு கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளது. ஒட்டன்சத்திரத்தில் சி.க.வலசில் பழனியாண்டவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டு, விரைவில் ஒட்டன்சத்திரத்தில் 10 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 20 கோடி செலவில் சொந்தக் கட்டிடத்தில் செயல்படவுள்ளது.

 

"Agriculture college will be started in Ottanchatra"- Minister Chakrapani's announcement!

 

விரைவில் ஒட்டன்சத்திரத்தில் வேளாண்மைக் கல்லூரி தொடங்கப்படவுள்ளது. மேலும் உயர்கல்வித்துறை சார்பில் ஒட்டன்சத்திரத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி துவங்கப்பட்டுள்ளது. விரைவில் இதுவும் சொந்த கட்டிடத்தில் கள்ளிமந்தையத்தில் செயல்படவுள்ளது. விருப்பாட்சியில் ஐ.டி.ஐ எனப்படும் தொழிற்பயிற்சி கல்லூரியும் தொடங்கப்படவுள்ளது. கேதையுறும்பில் 45 ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் தொடங்கப்படவுள்ளது. காளாஞ்சிபட்டியில் டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கு ஆசிரியர்களைக் கொண்டு பயிற்சி அளிப்பதற்காக சிறப்பு மையம் துவங்கப்படவுள்ளது. மாணவர்கள் கல்வியில் எல்லா வளங்களையும் பெற்று முன்னேற வேண்டும். இளைஞர்கள் தங்களுடைய எதிர்கால திட்டமிடல் சார்ந்து பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகிறார்கள். இதனை நன்கு உணர்ந்த அரசு 9- ஆம்  வகுப்பிலிருந்து 12- ஆம் வகுப்பு வரை மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 

கடந்த மார்ச் 1- ஆம் தேதி முதல்வரால் தொடங்கப்பட்ட 'நான் முதல்வன்' எனும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். அது இளைஞர்கள் தங்களது எதிர்கால திட்டத்தை உருவாக்கிக் கொள்ளும் வகையில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களாக தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இல்லம் தேடி கல்வித்திட்டம் முன்னோடி திட்டமாக உள்ளதுடன், மட்டுமல்லாமல் மற்ற மாநிலங்களுக்கும் முன் உதாரணமாக உள்ளது" என்று கூறினார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

திண்டுக்கல்லில் காவி நிறத்தில் வந்தே பாரத்?

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில் மதுரையில் இருந்து பெங்களூருக்கு காவி நிறத்தில் வந்தே பாரத் ரயில் சேவை விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த மக்களவை தேர்தல் முடிந்தவுடன் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வந்தே பாரத் ரயில் திண்டுக்கல், கரூர், சேலம், தர்மபுரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் நின்று செல்லும் எனவும் கூறப்படுகிறது. மதுரை பெங்களூரு இடையே 435 கிலோமீட்டர் தூரத்தையும் 5.30 மணி நேரத்தில் வந்தே பாரத் கடக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.