Skip to main content

குட்டி எதிரியை கண்டு ஏன் எடப்பாடி பயப்படுகிறார்! இடைத்தேர்தலில்  இரண்டு தொகுதிகளையும்  கைபற்றுவோம்! டிடிவி பகீர் பேச்சு!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
d

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா முன்னேற்ற கழகம் கிழக்கு மேற்கு என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது.  இதில் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி  ஏற்பாட்டில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக் கூட்டத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி கலந்து கொண்டார்.
      

      இக் கூட்டத்துக்கு மாவட்ட அளவில் உள்ள கட்சி பொருப்பாளர்களும், தொண்டர்களும் பெரும் திரளாகவே கலந்து கொண்டனர். அதை கண்டு டிடிவி பூரித்து போய் விட்டார்.  அந்த அளவுக்கு முன்ளால் முதல்வர்களான  ஜெ., கலைஞர் வந்தால் எந்த  அளவுக்கு கூட்டம் வருமோ அது போல் கூட்டம் அலைமோதியதை கண்டு  ஒட்டன்சத்திரமே ஸ்தம்பித்து விட்டது.


           அப்படி  ஒரு மாநாடு  போல் இருந்த கூட்டத்தில் பேசிய  டிடிவியோ....மதுரையை தவிர அதற்கு பிறகு நடந்த  எந்த கூட்டத்திற்கும் இந்த பழனிச்சாமி அனுமதி கொடுப்பதில்லை.  எல்லா கூட்டங்களும் கோர்ட்டில்  அனுமதி வாங்கி தான் நடத்தி வருகிறோம்.  அது போல் தான் இந்த  கூட்டத்திற்கும் கோர்ட்டில் அனுமதி வாங்கி தான் நடத்தி வருகிறோம்.  ஆனால்  எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கிறார்கள்.  அப்படி இருக்கும் போது  எங்களுக்கு மட்டும் கொடுக்காது  ஏன் பயமா? இதில அண்ணன் பழனிச்சாமி வேற என்னை  குட்டி எதிரி  என்கிறார்.  ஆம் அம்மாவின் குட்டி எலியாக தான் இருக்கிறேன்.  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்பாங்க. ஆனால் நான் 16ஆயிரம் அடி பாய்வேன். இந்த  குட்டி எலிக்காக தான் பழனிச்சாமி உள்பட மூன்று அமைச்சர்களும் ஆர்.கே.நகர் வீதியில் அலைந்தார்கள்.

 

d

 

கொங்கு மண்டலத்தில் இருந்து  இதுவரை ஒரு முதல்வர்  கூட வரவில்லை என்பதற்காகதான்  இந்த  பழனிச்சாமியை சின்னம்மா முதல்வராக ஆக்கினார். ஸ்டாலின்  பழனிச்சாமி வீட்டுக்கு  போய் இருக்க கூடாது கோர்ட்டுக்கு தான் போய் இருக்க வேண்டும். திமுகவுடன் எடப்பாடி கூட்டணி வைத்து இருக்கிறார் .  அந்த அளவுக்கு திமுக  எம்.எல்.ஏ.களும், திமுக  நபர்களுக்கும்  தான்  காட்ராக்ட் கொடுத்து இருக்கிறார் .  அந்த ரிக்காடுகளை நான்கு மாதங்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் எடுத்து தலைமை செயலாளரிடம் கொடுத்து இருக்கிறார்கள்.   திகார் ஜெயிலுக்கு போனேன் என்கிறார்கள்.  எதுக்கு போனேன் உங்களுக்கு இரட்டை இலை சின்னம்  கிடைக்க தான்  போனேன். இப்ப ஊழல் ஆட்சி   தான் நடக்கிறதே தவிர அம்மா ஆட்சி நடக்க வில்லை  அதுனால தான் அம்மா ஆட்சியை உருவாக்குவோம். 

 

ஆர்.கே.நகரில் டோக்கனை தூக்கி  காட்டுகிறார்கள் என்கிறார்கள்.  அது வேறு யாரும் இல்லை மதுசூதனன் தனது கைத்தடிகளை தூண்டி விட்டு 20நோட்டை தூக்கி காண்பிக்க  சொல்லி வருகிறார்.


        திருவாரூர்,  திருப்பரங்குன்றத்தில் அம்மா முன்னேற்ற கழகம் மாபெறும் வெற்றி பெறும். அதற்கு கூட டிடிவி வானத்தில் இருந்து பணத்தை கொட்டினார் என்று சொல்வார்கள். வருகிற 31ம்தேதி தீர்ப்பு. நல்ல தீர்ப்பாக கிடைக்கும்.  இந்த  நிதி மன்றம் தடை உத்திரவு இருக்கும் வரை இந்த  ஆட்சியும் இருக்கு  தற்பொழுது மணல் கொள்ளை மூலம் தான் ஆட்சி நடக்கிறது.  அதுனால  எப்ப தேர்தல் வந்தாலும் அது பாராளுமன்றமானாலும்.சட்டமன்றமானாலும்  குக்கர் சின்னம் மூலம் அமோகமாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

 

இக் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் உள்பட பதிவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தர்மத்துப்பட்டியில் டி.டி.விக்கு வந்த சோதனை 

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The trial came to TTV in Dharmathuppatti

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

அதன்படி பல்வேறு அரசியல் கட்சிகள் தேர்தல் பரப்புரைகளை தீவிரமாக செய்து வரும் நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து எம்பிக்கள்,  அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின்  வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள தர்மத்துப்பட்டியில் பரப்புரையில் ஈடுபட்டிருந்த டி.டி.வி.தினகரன் பரப்புரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது செல்லும் வழியில் வாகனத்தை நிறுத்திய பறக்கும் படை அதிகாரிகள் அவரது வாகனத்தை சோதனை செய்தனர்.