Skip to main content

அரசு நிலத்தை பட்டா போட்டு வாங்கிய அதிமுக பிரமுகர்... அதிரடி நடவடிக்கை எடுத்த ஆட்சியர்! 

Published on 05/10/2021 | Edited on 05/10/2021

 

 ADMK Member who leased government land; Collector who took action!

 

தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் வட்டாரத்தில் இருக்கும் வடவீரநாயக்கன்பட்டி பகுதியில், தேனி கலெக்டர் குடியிருப்பு உள்பட பல்வேறு துறையின் அலுவலகங்கள் மற்றும் ஆயுதப்படை மைதானம் ஆகியவை இருந்துவருகிறது. இந்தப் பகுதிகளில சர்வே எண் 814, 2184, 2201, 1046, 1051 ஆகிய புல எண்களுக்குக் கட்டுப்பட்ட நிலங்களில் சுமார் 100 ஏக்கருக்கு மேல் அரசு புறம்போக்கு நிலங்கள் இருக்கிறது. இந்த நிலங்களை முன்னாள் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் தீவிர ஆதரவாளரான அதிமுக பெரியகுளம் ஒன்றிய பொறுப்பாளர் ஒருவர் மோசடியாகத் தனது பெயரில் மாற்றியிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தன் பெயரில் மட்டுமின்றி தனது தந்தை உள்ளிட்ட உறவினர்கள் பெயரிலும் மாற்றியிருக்கிறார். இதற்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள், அவர்களின் பினாமி பெயரிலும் பட்டா மாற்றம் செய்து கூட்டு மோசடி செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. 

 

குறிப்பாகப் பெரியகுளம் முன்னாள் கோட்டாட்சியராக இருந்த ஜெயப்பிரியா, ஆனந்தி, தற்போது வட்டாட்சியராக இருக்கும் கிருஷ்ணகுமார், ஏற்கனவே இருந்த  வட்டாட்சியர்கள் இரத்தினத்தாலா, மோகராம், தென்கரை உள்வட்ட நில அளவர் பிச்சைமணி உள்பட சில அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இப்படி மோசடியாகப் பட்டா மாற்றம் செய்யப்பட்ட இடங்களைத் தற்போது வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளின் துணையோடு வீட்டுமனைகளாகப் பிரித்து படுஜோராக விற்பனை செய்ய தொடங்கி இருக்கிறார்கள் என்ற பேச்சு பரவலாக எதிரொலித்துவந்தது.

 

 ADMK Member who leased government land; Collector who took action!
                                                   ஆட்சியர் முரளிதரன் 

 

இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் முரளிதரனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்பட சில பொதுமக்களும் புகார் செய்தனர். அதனடிப்படையில் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் ஒரு சிறப்பு ஆய்வுக் குழு அமைத்து, இந்தப் புகார்கள் மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். அதன்படி சம்பந்தப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அரசு விதிகளுக்கு மாறாக வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆய்வில் தெரியவந்தது. அதை தொடர்ந்து பட்டா வழங்கப்பட்ட காலக்கட்டங்களில் பெரியகுளம் தாலுகாவில் பணியாற்றிய வருவாய்த்துறை அதிகாரிகளின் பட்டியலை ஆட்சியர் சேகரித்தார். அதன்படி சம்பவம் தொடர்பாக தற்போதைய பெரியகுளம் தாசில்தார் கிருஷ்ணகுமார், போடி தாசில்தார் ரத்னபாலா, போடி துணை தாசில்தார் மோகன்ராம், ஆண்டிபட்டி துணை தாசில்தார் சஞ்சீவ் காந்தி ஆகிய 4 பேரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் முரளிதரன் அதிரடி உத்தரவிட்டார். இச்சம்பவம் தேனி மாவட்டத்தில் உள்ள அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மலைக் கிராமங்களுக்கு குதிரை மூலம் வாக்கு பெட்டி அனுப்பி வைப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் ஒவ்வொரு தேர்தலின் போதும் சாலை வசதி இல்லாத, போடி சட்டமன்ற தொகுதியிலிருந்து குதிரை மற்றும் கழுதை மூலம் வாக்கு பெட்டிகளை அனுப்பும் அவலம், கடந்த 40 ஆண்டு களாக நடைபெற்று வருகிறது. தற்போது நடைபெறும் 18 வது மக்களவை உறுப்பினர் தேர்தலிலாவது எங்களுக்கு சாலை வசதி அமைத்து தர வேண்டுமென இப்பகுதி மலைக் கிராம மக்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

இந்தியாவில் 18 வது மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெறும் நிலையில் தேனி மக்களவைத் தேர்தலின் போது வாக்குச்சாவடிகளுக்கு 40 வகையான உபகரணங்கள் கொண்ட பெட்டிகள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதியில் உள்ள பெரியகுளம் பகுதியில் அகமலை, ஊத்துக்காடு உள்ளிட்ட பகுதிகளுக்கும் போடி பகுதியில் கொட்டகுடி, குரங்கணி, டாப் ஸ்டேஷன் சென்ட்ரல், கொழுக்குமலை, அண்ணாநகர் உள்ளிட்ட 10 மலைக் கிராமங்களுக்கும் வாக்குப்பட்டி அனுப்பும் பணி போடி தாலுகா அலுவலகத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பதிவு இயந்திரம் உள்ளிட்ட 40 உபகாரணங்கள் கொண்ட பொருள்கள் அனுப்பப்பட்டது.

குறிப்பாக தேனி பாராளுமன்ற தொகுதி, ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இந்நிலையில் போடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 315 வாக்குச்சாவடிகள் இருக்கிறது. இந்த நிலையில் இன்று வாக்குப்பட்டி மற்றும் வாக்குப்பதிவு இயந்திரம் வாக்குப்பதிவுக்கு தேவையான 40 பொருட்கள் உள்ளடங்கிய உபகரணங்கள் உள்ளிட்டவைகளைத் தேர்தல் நடத்தும் அலுவலர் குமரவேல் தலைமையில் அனுப்பப்பட்டது. அதன்படி போடி தொகுதியில் உள்ள 10 மலைக் கிராமங்களுக்கு வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது.

Delivery of ballot boxes by horse to the villages of theni Hill

மலைக் கிராமங்களான காரிப்பட்டி, கொட்டகுடி, குரங்கணி  அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் மூலமாகவும் சென்ட்ரல் மற்றும் அகமது பகுதிகளுக்கு குதிரை மற்றும் கழுதை மூலமாகவும் வாக்குப்பட்டி அனுப்பப்பட்டது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்குப்பட்டி மதியம் 2 மணி அளவில் வாக்குப்பதிவு அலுவலர், வாக்குச்சாவடி பொறுப்பாளர் மற்றும் பி1 பி2 பி3 ஆகியோர்களுடன் வாக்குப்பட்டி துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் குதிரை மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.