Skip to main content

எட்டு வழிச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தலாம்! ஐகோர்ட் உத்தரவு

Published on 04/09/2018 | Edited on 04/09/2018
எ

 

சேலம் - சென்னை இடையேயான  எட்டுவழி பசுமைச்சாலைக்கு நிலத்தை கையகப்படுத்தலாம் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  பூவுலகின் நண்பர்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

 

2013, ஆண்டு கொண்டு வரப்பட்ட நில கையக சட்டத்தின் 105 வது  பிரிவு செல்லும் என உயர்நீதிமன்றம்  தெரிவித்துள்ளது.  அவசர தேவைக்காக சமூகம் மற்றும் சுற்றுசூழல் பாதிப்பு தொடர்பாக ஆய்வு நடத்த தேவையில்லை என உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.        

 

சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக  270 கி.மீ தொலைவில் அமைக்கப்பட இருக்கும் எட்டுவழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையப்படுத்தும் பணி அரசு தரப்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  ஆனாலும், சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைத் திட்டத்திற்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ், பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். 

 

இவ்வழக்கு கடந்த ஆகஸ்ட் மாதம்21ம் தேதி   நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சேலம்-சென்னை பசுமைவழிச் சாலைக்கு நிலம் கையகப்படுத்த இடைக்கால தடை விதித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  மேலும், மனுதாரர்கள் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதால் தடை விதிக்கப்படுவதாகவும் மறு உத்தரவு வரும் வரை நிலம் கையப்படுத்தக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  இந்நிலையில் இன்றைய விசாரணையில் நிலத்தை கையகப்படுத்தலாம் என்று உயர்நிதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

                                                                              


 

சார்ந்த செய்திகள்

Next Story

‘பொய் முதலமைச்சர்’ என இ.பி.எஸ்சை கண்டித்து எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் கண்டனம்!

Published on 12/07/2019 | Edited on 12/07/2019

ஒரு பொய்யை தொடர்ந்தது சொன்னால் அது உண்மையாகும் என்பதற்கு உதாரணம் போல தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பேசிவருகிறார். எட்டு வழிச்சாலையால் சென்னை – சேலம் இடையிலான பணய தூரம் 70கிமீ தூரம் குறையும் எனக்கூறிவருகிறார். இவர்கள் சொல்லும் 277கிமீ தூரம் என்பது சேலம் முதல் படப்பை வரை மட்டுமே.  படப்பை முதல் சென்னைக்கு 43கிமீ தூரம் உள்ளதை மறைத்து தொடர்ந்து பொய் கூறி வருகிறார் முதலமைச்சர் என எடப்பாடியை கண்டித்துள்ளது சேலம் எட்டுவழி சாலை எதிர்ப்பு இயக்கம் 

Eight-lane protest movement condemns to EPS


உண்மையில் பயண நேரம் 10கிமீ  மட்டுமே குறையும் என்பதே உண்மை. அதாவது தற்போது சென்னை-சேலம் இடையிலான பயண தூரம் 330கிமீ தூரம். புதியதாக அமைக்கப்படவுள்ள 8 வழிச்சாலை என்பது திட்டமிட்டது சேலம் டூ படப்பை வரை 277 கி.மீ. படப்பை டூ சென்னை வரை + 43கி.மீ. 277+43=320கிமீ.  330-320=10கிமீ மட்டுமே குறையும் என்பது உண்மை.

Eight-lane protest movement condemns to EPS


இந்த திட்டத்துக்கு 93% விவசாயிகள் ஆதரவு தருகிறார்கள் என்பதும் பொய். 99% விவசாயிகள் எதிர்ப்பு என்பதே உண்மை. அத்தோடு தேர்தலுக்கு முன்பு உயர் நீதிமன்ற தீர்ப்பை அம்பலப்படுத்துவோம் என்று கூறிவிட்டு தற்பொழுது அதை காற்றில் பறக்க விட்டு விட்டு இது சேலத்திற்கான சாலை இல்லை கோவைக்கான சாலை என்கிறார். இதுவும் பொய்.

 

Eight-lane protest movement condemns to EPS


இப்படி பொய்யை மட்டுமே பேசும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம் கண்டனத்தை பதிவு செய்கிறது. தொடர்ந்து பொய்களாக பேசிவரும் முதலமைச்சரை கண்டித்து பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

 

 

 

 

Next Story

எட்டுவழிச்சாலை திட்டம்: மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கருப்புக்கொடி போராட்டம்!

Published on 02/06/2019 | Edited on 02/06/2019

 

தமிழகத்தில் சென்னை - சேலம் இடையே பசுமைவழி விரைவுச்சாலை என்ற பெயரில் புதிதாக எட்டுவழிச்சாலைத் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது. இதற்காக தமிழக அரசு இத்திட்டம் அமைய உள்ள சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களிலும் நிலம் கையகப்படுத்தும் பணிகளில் தீவிரமாக இறங்கியது. 

 

w


இத்திட்டத்திற்காக விளை நிலங்கள் பெருமளவு கையகப்படுத்தப்படுவதை எதிர்த்து விவசாயிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எட்டுவழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், மக்களிடம் கருத்து கேட்காமல் திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தியது தவறு என்றும், இதற்காக வெளியிடப்பட்ட அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தீர்ப்பு அளித்தது.


இந்நிலையில், கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு, சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனால் விரக்தி அடைந்த சேலத்தைச் சேர்ந்த விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள் மேல்முறை செய்த மத்திய அரசைக் கண்டித்தும், அதற்கு துணை நிற்கும் மாநில அரசைக் கண்டித்தும் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். 


சேலத்தை அடுத்த நாழிக்கல்பட்டியில் உழவர் உற்பத்தியாளர் பேரியக்கம் சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் சனிக்கிழமை (ஜூன் 1) கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். விவசாயிகளின் உணர்வுகளை மதித்து, மேல்முறையீட்டை திரும்பப்பெற வேண்டும் என்றும் கூறினர். மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன முழக்கங்கள் எழுப்பினர்.
 

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ''தமிழகத்தில் விவசாய நிலங்களை அழித்து பல்வேறு திட்டங்களை கொண்டு வர மத்திய அரசு துடிக்கிறது. இதற்கு மாநிலத்தில் உள்ள அதிமுக அரசு துணை போகிறது. விவசாயம் பாதிக்கும் என்பதால்தான் குஜராத்தில் எட்டுவழிச்சாலைத் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவில்லை. அப்படி இருக்கும்போது தமிழகத்தில் மட்டும் அத்திட்டத்தை கொண்டு வர துடிப்பது ஏன்?


தேர்தலில் பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்த மாநிலம் என்பதால்தான் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த தீவிரம் காட்டுகிறது. வாக்கு எண்ணிக்கை முடிந்த சில நாள்களில் இந்த திட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு மேல்முறையீடு செய்திருக்கிறது. விவசாயத்தைப் பாதிக்கும் இதுபோன்ற திட்டங்களால் தமிழகம், சோமாலியா நாடு போல் மாறி விடும். தமிழக மக்கள் அகதிகளாக வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இத்திட்டத்தைக் கைவிடாவிட்டால் பல்வேறுகட்ட போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என்றனர்.