திருப்பதி அருகே செம்மரங்கள் கடத்த லாரியில் சென்றதாக 87 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலம் திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு போலீசார் நாள்தோறும் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், நேற்றிரவு வழக்கம் போல் போலீசார் ரோந்து சென்ற போது, திருப்பதி கடப்பா சாலையில் தார்பாய் போட்டு சென்று கொண்டிருந்த லாரி ஒன்று செல்வதை கண்ட அவர்கள் 15 கி.மீ. தூரம் பின்தொடர்ந்து சென்று ஆஞ்சநேயபுரம் வனத்துறை சோதனை சாவடியில் லாரியை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
அப்போது லாரியின் பின்புறம் தார்பாய் அடியில் 84 பேர் மறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அனைவரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் திருவண்ணாமலை, வேலூர், மாவட்டங்களை சேர்ந்தவர்கள் ஆவர். கைதானவர்களிடம் ஆந்திர காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட தமிழர்கள் தாங்கள் மேஸ்திரி வேலைக்கு சென்றதாகவும், இவர்கள் எங்கள் மீது பொய் வழக்கு பதிவு செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.
திருப்பதி அருகே 87 தமிழர்கள் ஆந்திர போலீசாரால் கைது!
சார்ந்த செய்திகள்
Next Story
தேர்த் திருவிழா; மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயம்
தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் காயமடைந்துள்ளனர்.
ஆந்திர பிரதேசம் மாநிலம் கர்னூல் மாவட்டம் சின்ன தெகூர் கிராமத்தில் நடந்த உகாதி விழாவையொட்டி ஆஞ்சநேயர் கோயிலில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் மீது வயர் உரசி தேரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இந்த விபத்தில் மின்சாரம் தாக்கியதில் 15 குழந்தைகள் காயமடைந்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக குழுந்தைகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்தத் தகவலை கர்னூல் கிராமப்புற காவல் நிலைய காவலர் கிரண் குமார் உறுதிப்படுத்தியுள்ளார். தேர்த் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 15 குழந்தைகள் படுகாயமடைந்த சம்பவம் ஆந்திராவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த மார்ச் மாதம் 8 ஆம் தேதி (08.03.2024) ராஜஸ்தான் மாநிலம் கோட்டா அருகில் உள்ள காளிபஸ்தி என்ற இடத்தில் சிவராத்திரி விழா முன்னேற்பாடுகள் நடைபெற்று வந்தன. அங்கிருந்த சிறுவர்கள் கலசத்தில் தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளனர். அப்போது சிறுவர்கள் எடுத்துச் சென்ற கொடி கட்டிய இரும்புக் குழாய், உயரழுத்த மின்கம்பி மீது உரசியது. இதனால் சிறுவர்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் 17 சிறுவர்கள் படுகாயமடைந்தது குறிப்பிடத்தக்கது.
Next Story
சென்னை அருகே நிலநடுக்கம்!
சென்னை அருகே லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே இன்று (14.03.2024) இரவு 8.43 மணியளவில் 3.9 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. அதாவது திருப்பதியிலிருந்து கிழக்கு வடகிழக்கு திசையில் 58 கி.மீ. தொலைவில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டி மற்றும் சூலூர் பேட்டை ஆகிய சுற்றுப் பகுதியில் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.