Skip to main content

வேலூரில் 50 லட்சம் மதிப்பிலான போதை பாக்குகள் பறிமுதல்

Published on 03/05/2019 | Edited on 03/05/2019

 

தமிழகத்தில் தடை செய்யப்பட்ட போதை பாக்குகளான ஹான்ஸ், குட்கா போன்ற பொருட்கள், பெங்களூர், மகாராஷ்டிராவில் இருந்து கடத்திவரப்பட்டு தமிழகத்தில் பரவலாக விற்பனை செய்யப்படுவதும், இதனை ஆங்காங்கே பறிமுதல் செய்யப்படுவதும் தொடர்கதையாகியுள்ளது.

 

kutka

 

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில்  ஆம்பூர் நகர காவல்துறையினர் மற்றும் தனிப்படை போலீசார் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

 

வேலூர் மாவட்டம், ஆம்பூர் நகர காவல்துறையினர் தங்க நாற்கர சாலையில் மே 3 ந்தேதி காலை வாகன சோதனையில் ஈடுப்பட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து வேலூர் நோக்கி வந்த லாரியை மடக்கி சோதனை செய்தபோது, லாரியில் தடை செய்யப்பட்ட போதை பொருட்களான குட்கா, ஹான்ஸ், போதை பாக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருட்கள் லாரி முழுவதும் பெட்டி பெட்டியாக இருந்தது சோதனையில் தெரியவந்தது. லாரியை ஓட்டிவந்த சேலத்தை சேர்ந்த லாரி ஓட்டுநர் சுரேஷ் குமார் அவரது உதவியாளர் சரவணன் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்ததில் காரில் வந்தவர்கள் லாரிக்கு வழிகாட்டியாகவும் பாதுகாப்பாகவும் வந்ததாக அவர்கள் கூறினார்கள்.

 

kutka

 

இதனால் லாரிக்கு வழிக்காட்டியபடி வந்த ஒரு கார் ஒன்றையும் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் வந்த வேலூர் சைதாப்பேட்டை பகுதியை சேர்ந்த கார் ஓட்டுநர் இப்ராஹிம், முகமது பையாஸ் மற்றும் முகமது கௌவுஸ் ஆகியோரையும் கைது போலீசார் செய்தனர்.

 

அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்தனர். அவர்கள் மீது ஆம்பூர் நகர போலீசார் வழக்குபதிவு செய்து ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான போதைபாக்குகள் மற்றும் குட்காவை பறிமுதல் செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய லாரியையும், லாரிக்கு பாதுகாப்பாக வந்த காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 

kutka

 

பெங்களூருவில் இருந்து மட்டும் சாலை மார்க்கமாக தினமும் சுமார் 10 கோடி ரூபாய்க்கு மேல் போதை பொருட்கள் கடத்தப்படுகின்றன என்கின்றனர் காவல்துறையில் உள்ள நேர்மையான அதிகாரிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.