Skip to main content

சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் கடலாடி சத்திய மூர்த்திக்கு 5 ஆண்டுகள் சிறை!

Published on 06/06/2018 | Edited on 06/06/2018

அதிமுக முன்னாள் அமைச்சர்  சத்தியமூர்த்திக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 5 ஆண்டு சிறை தண்டனையும், அவரது  மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1991 - 1996ல் அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில்  வணிக வரித்துறைக்கு அமைச்சராக, 1993ஆம் ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி முதல் அமைச்சராக நியமித்தார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர், கடலாடி சத்தியமூர்த்தி அமைச்சராக இருந்த காலத்தில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சத்தியமூர்த்திக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்ததன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
 

5 years imprisonment for truth


இந்த விசாரணையின் முடிவில் வருமானத்துக்கு அதிகமாக 83 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய்க்கு தனது பெயரிலும், மனைவி சந்திரா பெயரிலும் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புதுறை நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இருவர் மீதான குற்றச்சாட்டுகளையும் ரத்து செய்து இருவரையும் விடுவித்தது. இந்த வழக்கிலிருந்து இருவரும் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து 2001ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
 

இதற்கிடையில் 2011ஆம் ஆண்டு கடலாடி சத்தியமூர்த்தி திமுக-வில் இணைந்தார். அந்த வழக்கில் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளார். அதில், கடலாடி சத்தியமூர்த்தியும், அவரது மனைவி சந்திரா ஆகியோர் விடுவிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தார். மேலும் சத்தியமூர்த்துக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் மற்றும் 5 லட்ச ரூபாய் அபராதமும் விதித்துள்ளார். அவரது மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டு சிறையுடன், 5 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.

தீர்ப்பு அறிவிக்கப்பட்ட பின்னர், இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப் போவதாகவும், சரணடைய கால அவகாசம் அளிக்க வேண்டும் என இருவர் தரப்பிலும் கோரிக்கை வைக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்க நீதிபதி மறுத்துவிட்டார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம் ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.