Skip to main content

இதுவரை 56 லட்சம் பிடித்துவிட்டோம்; பீத்திக்கோள்ளும் திருவாரூர் மாவட்ட பறக்கும் படை!

Published on 14/03/2019 | Edited on 14/03/2019

திருவாரூர் மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் இதுவரை ரூ 56 லட்சம்  பறிமுதல் செய்துள்ளதாக பெருமைபடுகிறார்கள்.

 

We have 56 lakhs so far. Thiruvarur district flying force!

 

கடந்த 10 ஆம் தேதி 17 வது மக்களவை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்தது. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் 24 சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுமாவட்டத்திற்குள் வரும் அனைத்து வாகனங்களும் முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின் அனுப்பப்படுகின்றன.

 

இன்று அதிகாலை திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே உள்ள முகந்தனூர் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பொழுது. வேளாங்கண்ணியில் இருந்து தஞ்சை நோக்கி வந்த சொகுசு காரை சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதில் ஆவணங்கள் இல்லாமல் இருந்த  3 லட்சத்து 18ஆயிரத்து 500 ரூபாயை கைப்பற்றினர். அந்த தொகையின் உரிமையாளரான தஞ்சாவூரை சேர்ந்த பென்னிரபெல் என்பவரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.

 

இதுகுறித்து அங்கிருந்தபடியே கவனித்த பொதுமக்கள் கூறுகையில், " தை மாதம் துவங்கி விட்டாலே திருமணம், காதுகுத்து ,வளையணி விழா, கோயில் திருவிழா, என விசேஷங்கள் துவங்கிவிடும். இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் அதிகமாக நடக்கும்.

 

We have 56 lakhs so far. Thiruvarur district flying force!

 

அவரவர்கள் சொந்த தேவைக்கும், விஷேஷங்களுக்கு புடவை எடுக்க, நகை எடுக்க, வீட்டுக்கான பொருட்கள் வாங்க எடுத்துச் செல்லும் பணத்தை பறிமுதல் செய்து அவர்களை அலைக்கழிப்பது வேதனையாக இருக்கிறது.  அரசியல்வாதிகளின் கார்களை கண்டால் அதிவிரைவு படை அதிவேகமாக ஒதுங்கி நிற்பதும். பொதுமக்களின் கார்களை கண்டால் அதிரடியாக சுற்றிவளைப்பதும் வேதனையாக இருக்கிறது.

 

தேர்தல் வந்துவிட்டாலே மாவட்ட ஆட்சியரும், மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் தேர்தல் அதிகாரிகளாக மாறிவிடுகின்றனர். அது எப்படி சாத்தியம் ஆகிறது என்பதுதான் புரியவில்லை. மாவட்ட ஆட்சியர் எப்போதுமே அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கும் ஆதரவாக இருந்து வருவது அப்பட்டமாகவே தெரிகிறது. அதேபோல் மாவட்ட காவல் அதிகாரியில் துவங்கி கீழ்மட்ட காவலர்கள் வரை ஒவ்வொரு ஏரியா அரசியல்வாதிகளிடமும் இனக்கமாக இருப்பதும் மக்களுக்கு நன்கு தெரிந்தது தான்.  இந்த சமயத்தில் அரசியல்வாதிகள் கொண்டு வரும் பணத்தை அவர்கள் எப்படி பிடிப்பார்கள் வேறு மாநிலத்திலிருந்தா காவலர்கள், அதிகாரிகள் வந்து பிடிக்கிறாங்க. இதற்கெல்லாம் நிச்சயம் ஒரு நாள் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்." என்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.