Skip to main content

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 லட்சம் மதிப்புள்ள புகையிலை பான்மசா பறிமுதல்!

Published on 18/09/2018 | Edited on 18/09/2018

தேனி அருகே உள்ள வடபுதுப்பட்டி கிராமம் காலேஜ் ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் போதைப்பொருள்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் தேனி மாவட்ட உணவுப் பொருள் பாதுகாப்பு நியமன அலுவலர் சுகுணா தலைமையில் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று நேரில் ஆய்வு செய்தனர்.

 

kutka

 

அப்பொழுது வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்பக்கம் பூட்டபட்டிருந்ததால் காவல்துறையினரின் உதவியோடு பூட்டிய வீட்டின் கதவை உடைத்து அதிரடியாக உள்ளே சென்று ஆய்வு நடத்தினர். அப்போது வீட்டினுள் 30 க்கு மேற்பட்ட மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தது, மூடையை உடைத்து சோதனை மேற்கொண்டதில், புகையிலை பொருட்கள், பான் மசாலா, போதை பாக்குகள் உள்ளிட்ட 5 வகையான போதைப்பொருள்கள் இருப்பது தெரியவந்தது. உடனே அந்த போதைப்பொருட்களை பறிமுதல் செய்தனர் அந்த போதை பொருள்களின் மதிப்பு சுமார் 5லட்சம் இருக்கும் என உணவு பாதுகாப்பு அதிகாரி சுகுணா தெரிவித்தார். 

 

இப்படி பதுக்கி வைக்கப்பட்டிருந்த வீட்டின் உரிமையாளர் அதே பகுதியை சேர்ந்த சித்தன் என்பது தெரியவந்தது இவர் சமீபத்தில் 20 நாட்களுக்கு முன்பு தான் தேனியில் பலசரக்கு கடை வைத்திருக்கும் நவரத்தினவேல் என்பவருக்கு வாடகைக்கு விட்டதாக முதல் கட்ட தகவலில் தெரியவந்தது. இது குறித்து அல்லிநகரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து  போதை பொருட்கள் பதுக்கிய நாகரத்தினவேலை தேடி வருகின்றனர். இப்படி தடை செய்யப்பட்ட போதை பொருள்களை வீட்டில் பறிமுதல் செய்தது அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

காரும் - லாரியும் மோதி விபத்து; மாவட்ட கல்வி அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Car-Lorry Collision incident Tragedy happened to the district education officer

காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மாவட்ட கல்வி அதிகாரி உள்பட இருவர் பலியான சம்பவம்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே உள்ள பொம்மிநாயக்கன்பட்டி விளக்கு என்ற பகுதியில் கார் ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதே சாலையில் மின் லாரி ஒன்றும் எதிர் திசையில் வந்துள்ளது. அப்போது எதிர்பாராத விதமாக காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில் காரில் இருந்த தேனி மாவட்ட தனியார் பள்ளிகளுக்கான மாவட்ட கல்வி அதிகாரி சங்குமுத்தையா மற்றும் அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.

இந்த விபத்தில் சிக்கிய மினி லாரி ஓட்டுநர் படுகாயங்களுடன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். காரும் - மினி லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் சிக்கி கல்வி அதிகாரி சங்குமுத்தையாவும், அவரது கார் ஓட்டுநரும் சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

ஆளுநர் வருகை; தேனியில் கருப்புக்கொடி காட்டி போராட்டம்!

Published on 08/02/2024 | Edited on 08/02/2024
Governor Ravi in Theni by DMK alliance parties showing black flag

தேனி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக தமிழக  ஆளுநர் ஆர்.என் ரவி மதுரை விமான நிலயத்திலிருந்து சாலை வழியாக தேனி மாவட்டத்திற்கு வருகை தந்தார்

இந்நிலையில் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகைக்கு தேனி மாவட்டத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர் செயலைக் கண்டித்தும் தமிழக அரசுக்கு எதிராக ஆளுநர் தொடர்ந்து இடையூறு செய்வதைக் கண்டித்தும் இன்று தேனி மாவட்டத்திற்கு வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியைக் கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையத்தில் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கருப்புக் கொடிகளைக் காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த சுமார் ஐநூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உட்பட கட்சித் தொண்டர்கள் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்புகளை பழைய பஸ் நிலையம் அருகே தெரிவித்தனர். இதனால் அப்பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.