Skip to main content

சேலத்தில் டிப்தீரியா காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி!

Published on 03/11/2018 | Edited on 03/11/2018

சேலம் அருகே, டிப்தீரியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவன் உயிரிழந்தான்.


சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள கே.கே.நகரை சேர்ந்தவர் செல்வம். கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சந்திரா. இவர்களுக்கு நான்கு வயதில் ரோகித் என்ற மகன் இருந்தான். ரோகித் தவிர, லத்திகா (12), அஜய் (8) ஆகிய இரு குழந்தைகளும் உள்ளனர்.

 

 4-year-old boy dies for Diphtheria fever in Salem

 

கடந்த மாதம் 27ம் தேதி சிறுவன் திடீரென்று காய்ச்சலால் பாதிக்கப்பட்டான். சிறுவனை, ஈ.காட்டூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு பெற்றோர் கொண்டு சென்றனர். சிறுவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் தொடர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினர்.

 


இதையடுத்து சிறுவன் ரோகித்தை சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீண்டும் 29ம் தேதியன்று பரிசோதனைக்கு வருமாறு கூறினர். ஆனாலும், காய்ச்சல் குறையாததால் வீடு அருகே உள்ள தனியார் கிளினிக் ஒன்றிலும் சிறுவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

 


இந்நிலையில், அக். 31ம் தேதியன்று ரோகித் மட்டுமின்றி, அவனுடைய அக்காள் லத்திகா (12) அண்ணன் அஜய் (8) ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர். மூன்று பேரையும் பெற்றோர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

 

 4-year-old boy dies for Diphtheria fever in Salem

 

ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன் ரோகித் உயிரிழந்தான். பெற்றோர் மற்றும் ஊர்க்காரர்கள், ஆரம்பத்திலேயே முறையான சிகிச்சை அளிக்காததால்தான் சிறுவன் இறந்துவிட்டதாகக்கூறி ஈ.காட்டூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டனர்.

 


மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார், இடங்கணசாலை பேரூராட்சி செயல் அலுவலர் ராஜ விஜயகணேஷ், மகுடஞ்சாவடி வட்டார மருத்துவ அலுவலர் முத்துசாமி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 


இதுகுறித்து ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் கூறுகையில், ''சிறுவன் ரோகித், டிப்தீரியா எனும் தொண்டை அடைப்பான் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்தான். காய்ச்சல் முற்றிய நிலையில்தான் பெற்றோர் அவனை சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். சிறுவன் வந்தவுடன் போதிய முதலுதவி சிகிச்சை அளித்து, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கவும் பரிந்துரை செய்தோம்,'' என்றனர்.

 


முன்னதாக, போலீசார் மற்றும் மருத்துவர்கள் நடத்திய சமாதான பேச்சுவார்த்தையில் பொதுமக்கள் சமதானம் அடைந்து, அங்கிருந்து கலைந்து சென்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

'இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது'-எடப்பாடி பழனிசாமி பேச்சு

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தொடங்கியுள்ளன.

அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக நடைபெற்று  வருகிறது. இந்நிலையில் சேலத்தில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், ''பிரம்மாண்டமான கட்டிடத்தை கட்டி கொடுத்திருக்கிறோம். கட்டி 3 வருடம் ஆகிறது. 1200 கோடியில் கட்டிக் கொடுத்திருக்கிறோம். ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா என பல கட்டிடங்களை கட்டி வைத்திருக்கிறோம். ஆனால் ஒற்றைச் செங்கலை தூக்கிக்கொண்டு ஊர் ஊராக போகிறீர்களே உதயநிதி ஸ்டாலின் பல லட்சம் செங்கலில் கட்டி இருக்கிறோம் ஏன் அதை திறக்க மாட்டேன் என்கிறீர்கள்.

அதிமுக ஆட்சியில் கட்டப்பட்ட கட்டிடம் என்று இன்றுவரை ரிப்பன் வெட்டுவதற்கு உங்களால் முடியவில்லை. மூன்று வருடம் ஆகிறது. இனியாவது ரிப்பன் வெட்டுங்கள் ஏனென்றால் ஆட்சி சீக்கிரம் போகப் போகிறது. என்ன கொடுமை பாருங்கள் நிறைவேற திட்டத்தை செங்கல்லை தூக்கிக்கொண்டு விளம்பரம் செய்கிறார்கள். ஆனால் கட்டிமுடித்த திட்டத்தை திறக்க முடியாத ஒரே அரசு திமுக அரசு. இந்த திட்டம் கொண்டுவரக் கூடாது என்று பார்க்கிறார்கள்.

இது ஆசியாவிலேயே மிகப்பெரிய திட்டம். கால்நடை பூங்கா திட்டம் முழுக்க முழுக்க விவசாயிகளுக்காக கொண்டுவரப்பட்ட திட்டம். அமெரிக்கா செல்லும் பொழுது அங்கு ஒரு பால் பண்ணைக்கு சென்றேன். அங்கு ஒரு பசு ஒரு நாளைக்கு 65 லிட்டர் பால் கறக்கிறது. அந்த பசு போல நம்முடைய மாநில சீதோசன நிலைக்குத் தக்கவாறு கலப்பின பசுக்களை உருவாக்கி விவசாயிகள் கொடுக்க வேண்டும். 40 லிட்டர் பாலை ஒரு நாளைக்கு கறந்து அவர்கள் வருமான பெருக வேண்டும் என்பதற்காக இந்த அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தேன். அதில் கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு, மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் உள்ளது . அதன் மூலமாக கண்டுபிடிக்கப்பட்டு கிடைக்கும் கால்நடைகளை விவசாயிகளுக்கு கொடுத்து இந்த திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதுதான் இந்த திட்டத்தின் குறிக்கோள். இன்று நாம் ஒரு ஆடு வளர்த்தால் 20 கிலோ தான் கிடைக்கும். ஆனால் கலப்பின ஆடு வளர்த்தால் 40 கிலோ கிடைக்கும். இந்த திட்டத்தை முடக்கி வைத்த அரசாங்கம் திமுக அரசாங்கம். கால்நடை பூங்கா வந்திருந்தால் இந்தப் பகுதி பெரிய வளர்ச்சி அடைந்திருக்கும். உலக அளவில் நம்முடைய சேலம் கெங்கவல்லி சட்டமன்ற தொகுதி பிரசித்தி பெற்றிருக்கும்'' என்றார்.

Next Story

குடிநீரில் கலந்த கழிவுநீர்; 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சேர்ப்பு

Published on 04/04/2024 | Edited on 04/04/2024
sewage mixed with drinking water; More than 50 people were hospitalized

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடிநீர் குழாய் உடைந்து கழிவுநீர் கலந்த நிலையில் கழிவுநீர் கலந்த நீரை குடித்த 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் என உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியைச் சேர்ந்த முத்தம்பட்டி, ஏத்தாப்பூர், பெத்தநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீரில் கழிவுநீர் கலந்துள்ளதாக தெரிகிறது. இதில் 50க்கும் மேற்பட்டோர் வாந்தி, மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் குழாயில் ஏற்பட்ட திடீர் உடைப்பு காரணமாக அதில் கழிவுநீர் கலந்ததும் அந்த நீரை பயன்படுத்தியதால் பலருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. இது குறித்து அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.