Skip to main content

3 பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட தந்தை!

Published on 04/10/2017 | Edited on 04/10/2017
3 பிள்ளைகளையும் கொன்று தானும் தற்கொலை
செய்து கொண்ட தந்தை!

திருச்சி ஜீயபுரத்தின் அருகே ஒய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவர் தன் 2 மகள்கள், மகனுக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி குளித்தலை சாலையில் உள்ள ஜீயபுரம் திருச்செந்துறை அக்ரகாரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி 85 வயதை உடையவர் இவருடைய மனைவி கமலா அவரும் 80 வயதை உடையவர் இவர்களுடைய மகன்கள் சுப்பிரமணியன் 55 வயது ரகு 40 வயது மகள்கள் அகிலா 50 வயது மது 45 வயது கிருஷ்ணமூர்த்தி பீகார் மாநிலத்தில் உள்ள மத்திய அரசின் ரூர்கேலா உருக்காலையில் டெலிபோன் துறையில் அதிகாரியாக வேலை செய்து ரிட்டையர்டு ஆனவர்.

ஒய்வு பெற்றவுடன் சிறிது காலம் அங்கயே இருந்து விட்டு 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினருடன் திருச்செந்துறை அக்ரகாரம் பகுதியில் சொந்தவீடு வாங்கி அங்கே வசித்துவந்துள்ளார். கிருஷ்ணமூர்த்தியின் மகள்களான அகிலா, மது, மகன் ரகு ஆகிய 3 பேரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். என்பவதால் யாரும் கல்யாணம் செய்து கொள்ளவில்லை இதில் எல்லோருக்கும் பெரிய மகன் சுப்பிரமணியன் மட்டும் கல்யாணம் ஆகி மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசித்து வருகிறார். அவர் அதே பகுதியில் உள்ள வங்கி மேலாளராக பணியாற்றுகிறார். மூத்த மகனுடன் தாய் கமலா மட்டும் இருக்கிறார்.

கிருஷ்ணமூர்த்தி, அக்ரகாரத்தில் உள்ள வீட்டிலேயே மனநலம் குன்றிய அகிலா, மது, ரகு ஆகியோருக்கு சமையல் செய்து கொடுத்து விட்டு, கூடவே இருந்து கவனித்து வந்தார். மனநலம் பாதிக்கப்பட்ட மகள்கள், மகனை வயதான தன்னால் பாதுகாத்து பராமரிக்க முடியவில்லை என்று புலம்பி கொண்டே இருப்பாராம்.

இந்நிலையில் அவரது வீட்டுக்கு தினமும் பால் பாக்கெட் போடும் பால்காரர் நேற்று காலை 9.30 மணியளவில் சைக்கிளில் வந்து, பால் பாக்கெட்டை வீட்டின் முன் பக்க அறையில் பால் போட்டு விட்டு சென்றார். .

அப்போது அங்கு நேற்று முன்தினம் காலை, மாலையில் வைத்த பால் பாக்கெட்டுகள் எடுக்கப்படாமல் இருந்ததால் சந்தேகமாகி வீட்டில் யாரும் இல்லையே என்று தோன்றியவருக்கு இருக்காதே எல்லாருமே மனநலம் குன்றியவர்கள் கட்டாயம் வீட்டில் தான் இருக்க வேண்டும் என்று உள்ளே மெதுவாக நுழைந்த போது அந்த ரூம் கதவு திறந்து கிடந்தது. இதனால் பால்காரர் ரகு சத்தம்போட்டு கூப்பிட்டுள்ளார். ஆனால் வீட்டில் இருந்து யாரும் வெளியே வராததால் பால்காரர் வீட்டின் உள்ளே அறைக்கு சென்றார்.

அப்போது அந்த அறையில் அகிலா வாயில் நுரை தள்ளிய நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து உடனடியாக அவர் இதுகுறித்து அக்கம், பக்கத்தினருக்கு கூப்பிட்டார். என்னவோ ஏதோ என்று எல்லோரும் அலறி அடித்துக்கொண்டு கிருஷ்ணமூர்த்தி வீட்டிற்கு வர அங்கு இன்னொரு ரூமில் கிருஷ்ணமூர்த்தியும், அவரது மகன் ரகுவும் வாயில் நுரை தள்ளிய நிலையில் இறந்து கிடந்தனர். தகவல் கேள்விப்பட்ட ஜீயபுரம் போலீசார் ஜீயபுரம் அக்ரகாரத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

கிருஷ்ணமூர்த்தி அருகே சாப்பிட்ட பாத்திரங்கள் மற்றும் டம்ளர்கள் அப்படியே கிடந்தது வீட்டில் கிருஷ்ணமூர்த்தியுடன் வசித்து வந்த மற்றொரு மகளான மதுவை காணாததால் மதுவை போலீசார் தேடி வீட்டின் பின் பக்கம் சென்ற போது வாயில் நுரை தள்ளிய நிலையில் மதுவும் பிணமாக கிடந்தார். ஒரே குடும்பத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம், அந்த பகுதி மக்களிடையே பெரிய அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியது.

இதுகுறித்து திருச்சி சுப்பிரமணியபுரத்தில் வசிக்கும் கிருஷ்ணமூர்த்தியின் மகன் சுப்பிரமணியன் குடும்பத்தினருக்கும், மனைவி கமலாவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த அவர்கள் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது.

இதையடுத்து போலீசார் கிருஷ்ணமூர்த்தி, அகிலா, மது, ரகு ஆகிய 4 பேரின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக ஆம்புலன்சுகளில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி, அவரது மகள்கள் மற்றும் மகன் ஆகியோர் விஷம் கலந்த தயிர் சாத உணவை சாப்பிட்டதால் இறந்தது தெரியவந்தது. மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகள்கள், மகனை வயதான காலத்திலும் கிருஷ்ணமூர்த்தி சிரமத்துடன் கவனித்து வந்தார். தொடர்ந்து அவர்களை பராமரிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அதனால் தற்கொலை செய்ய அவர் முடிவு செய்துள்ளார்.

தான் இறந்து விட்டால் மனநலம் குன்றிய மகள்கள், மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என்று நினைத்த கிருஷ்ணமூர்த்தி, தயிர் சாதத்தில் விஷம் கலந்து தனது மகள்களுக்கும், மகனுக்கும் கொடுத்து கொன்று விட்டு, தானும் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்த ஜீயபுரம் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- ஜெ.டி.ஆர். 

சார்ந்த செய்திகள்