Skip to main content

20 வருடங்களாக கள்ளச்சாராயம்... கண்டுகொள்ளாத காவல்துறை... களமிறங்கிய வனத்துறை...

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், சிங்காரப்பேட்டை வனச்சாரத்துக்கு உட்பட்ட ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டுநாடுக்கு உட்பட்ட பகுதிகளில் சிங்காரப்பேட்டை வனச்சாரகத்துக்கு உட்பட்ட வனப்பகுதி மற்றும் வனப்பகுதியை ஒட்டிய தனியார் நிலங்களில் கள்ளச்சாரயாம் பலப்பல ஆண்டுளாக காய்ச்சப்பட்டு வருகிறது.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

இந்த கள்ளச்சாராயத்தை தடுக்க வேண்டும்மென கடந்த 20 ஆண்டுகளாக இப்பகுதி மலைவாழ் மக்கள் சார்பில் பலமுறை பலர் வனத்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு தந்தனர். யாரும் எந்த நடவடிக்கை எடுப்பதில்லை. அதிக நெருக்கடி வரும் நேரத்தில் மட்டும் காவல்துறை, சிலரை பிடித்து வந்து சாராயம் காய்ச்சினார்கள் என வழக்கு போடுவதோடு சரி. சாராய பானைகள், ஊறல் எங்கே எனக்கேட்டால், அந்தயிடத்துக்கு போக முடிவதில்லை, வனத்துறை ஊழியர்கள் ஒத்தொழைப்பதில்லை என காரணம் கூறி தப்பி வந்தனர்.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

இந்நிலையில் திருப்பத்தூர் வட்ட வனத்துறை அதிகாரிகள் கடந்த சில நாட்களாக அதிரடியாக வனத்துக்குள், வனத்தை ஒட்டிய பகுதிக்குள் சாராயம் காய்ச்சுவதை தடுக்க அதிரடி ரெய்டு செய்து வருகின்றனர். அதன்படி, திருப்பத்தூர் வனச்சரக அலுவலர் சோழராஜன் தலைமையில் 21 பேர் கொண்ட குழுவினர் மாம்பாக்கம் காப்புக்காடு, மேல்பட்டு, சிங்காரப்பேட்டை விரிவு காப்புக்காடு, சிங்காரப்பேட்டை மேற்கு பகுதிகளில் நடத்திய ரெய்டில் 1000 லிட்டர்க்கு மேற்பட்ட சாராய ஊறல்களை கைப்பற்றி அழித்துள்ளனர்.

 

 For 20 years the illicit liquor... Uncovered Police... Forest Department action

 

அதோடு, வனத்தை ஒட்டியுள்ள பட்டா நிலப்பகுதியிலும் சாராய ஊறல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்துள்ள வனத்துறை, அவர்கள் மூலமாகவே வனத்துக்குள் சாராய ஊறல் போட்டவர்கள், சாராயம் காய்ச்சியவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க தீவிரமாக தேடுதல் வேட்டை நடத்திவருகிறது.

 

 

வனத்துறையே இந்த விவகாரத்தில் தீவிரமாக களம்மிறங்கியுள்ளது. களம்மிறங்க வேண்டிய காவல்துறை இதுப்பற்றி அக்கறை கொள்ளாமல் அசட்டையாக உள்ளது என குற்றம்சாட்டுகிறார்கள் இப்பகுதி பொதுமக்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

திருமணத்தை மீறிய உறவு; பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த நடத்துநர்

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Conductor who doused woman with petrol and her in Krishnagiri

கிருஷ்ணகிரியைச் சேர்ந்தவர் திருப்பதி. இவரது மனைவி சிவகாமி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் கிருஷ்ணகிரி பாத்திமா நகரைச் சேர்ந்த அரசு பேருந்து நடத்துனர் மாதவன் என்பவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளாக திருமணத்தை மீறிய உறவு இருந்துள்ளது. இந்த நிலையில் மாதவனுக்கு வேறு சில பெண்களுடன் தொடர்பு  இருப்பதாக கருதிய லட்சுமி மாதவன் உடனான உறவை துண்டித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து மாதவன் சிவகாமிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சென்று லட்சுமியைப் பின் தொடர்ந்து வந்த மாதவன் சிவகாமியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தன்னுடன் பேசுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால்   இதற்குச் சிவகாமி மறுப்பு தெரிவிக்க, ஆத்திரமடைந்த மாதவன் சிவகாமி மீது பெட்ரோலை ஊற்றி உயிரோடு எரித்துள்ளார். பின்னர் வீட்டின் அருகே உள்ள முட்புதிரில் தீயில் கருகி நிலையில் உயிருக்கு போராடி கொண்டிருந்த சிவகாமியைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

இந்த நிலையில் இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் சிவகாமிடம் விசாரணை செய்ததில் மேற்கண்ட விவரங்கள் தெரியவந்துள்ளது. இதை அடுத்து மாதவன் மீது வழக்கு பதிவு செய்த போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story

தீ விபத்து; பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
incident for hotel near Patna Railway Station Bihar

பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படை வீரர்கள் தீயை அணைக்கும் பணியிலும், மீட்புப் பணியிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக முதற்கட்டமாக அனுப்பி வைக்கப்பட்டனர். இச்சம்பவம் பாட்னாவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்ததாகவும், 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர் என பாட்னா போலீஸ் எஸ்.எஸ்.பி. ராஜீவ் மிஸ்ரா தெரிவித்திருந்தார்.

இது குறித்து பாட்னா தீயணைப்புத் துறை போலீஸ் டிஜி, ஷோபா ஓஹட்கர் கூறுகையில், “தீயணைப்புத் அணைக்கும் மேற்கொண்டோம். இதுபோன்ற நெரிசலான பகுதிகளில் விபத்துகளை தடுக்க தொடர்ந்து சிறப்பு கவனம் செலுத்தி வருகிறோம். இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க நாங்கள் தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். சிலிண்டர் வெடித்ததால் இந்த தீ விபத்து நடந்தது. இருப்பினும் தற்போது தீ முற்றிலும் அணைக்கப்பட்டது” எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாட்னா சட்டம் மற்றும் ஒழுங்கு போலீஸ் டிஎஸ்பி கிருஷ்ணா முராரி கூறுகையில், “இந்த தீ விபத்தில் 5 முதல் 6 பேர் வரை இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ளனர். அதில் பலத்த காயம் அடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்” எனத் தெரிவித்தார்.