Skip to main content

டிக்கெட் பரிசோதகரால் மாட்டிக்கொண்ட கஞ்சா கடத்திய இளைஞர்...

Published on 30/08/2021 | Edited on 30/08/2021

 

10 KG Cannabis caught by ticket inspector near vellore

 

வேலூர் மாநகரில் இருந்து ஓசூர் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. பேருந்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர். அப்போது மாதனூர் பகுதியில் பேருந்தில் ஏறிய டிக்கெட் பரிசோதகர் உமாபதி, ஒவ்வொரு பயணிகளிடமும் அவர்களின் டிக்கெட்டை வாங்கி பரிசோதனை செய்துவந்தார். அப்போது பின்பக்க சீட்டில் அமர்ந்து கொண்டிருந்த இளைஞர் ஒருவரிடம் டிக்கெட் பரிசோதனை செய்துள்ளார். அப்போது, அவர் காலுக்குக் கீழ், சீட்டுக்கு அடியில் வைத்திருந்த பை பெரியதாக இருந்ததால் அதில் என்ன இருக்கிறது எனக்கேட்டுள்ளார். அதற்கு அந்தப் பயணி துணி என சொல்ல அதில் சந்தேகமடைந்த அவர், அந்த பையை திறந்துகாட்டச் சொல்லியுள்ளார்.

 

அதற்கு அந்த இளைஞர் பையைத் திறந்துகாட்ட மறுத்துள்ளார். இது நீண்ட வாக்குவாதமாகியுள்ளது. அப்போதும் அந்த இளைஞர் பையைச் சோதனை செய்ய அனுமதிக்க மறுத்ததால் ஆம்பூர் காவல் துறையினருக்கு டிக்கெட் பரிசோதகர் உமாபதி தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் விரைந்துவந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்தை நிறுத்தி உள்ளே சென்று அந்த பையைப் பரிசோதனை செய்தனர். அப்போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். உடனடியாக அந்த பையிலிருந்த 10 கிலோ கஞ்சாவையும் பறிமுதல் செய்த காவல்துறையினர், அந்த இளைஞரைக் கைது செய்தனர். 

 

விசாரணையில், அந்த இளைஞர் வேலூர் பகுதியைச் சேர்ந்த பைரோஸ் என்பதும், வேலூரிலிருந்து கஞ்சாவை பெங்களூருக்கு விற்பனை செய்வதற்காகக் கொண்டு சென்றதும் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, அவர் மீது கஞ்சா கடத்தியதாக வழக்குப் பதிவு செய்து வேலூர் மத்தியச் சிறையில் அடைத்தனர் காவல்துறையினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ரூ. 20 லட்சம் வரை சொத்து சேர்த்த பஞ்சாயத்து கிளார்க்; லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anti-corruption department raids panchayat clerk house

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியை சேர்ந்தவர் பிரபு. இவர் காட்பாடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் தற்போது பொன்னை அடுத்த பாலேகுப்பத்தில் பஞ்சாயத்து கிளார்க்காக பணியில் உள்ளார்.

2011 - 2017 ஆகிய இடைப்பட்ட காலகட்டத்தில் பணியின் போது வருமானத்திற்கு அதிகமாக சுமார் 20 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பிரபு மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து இன்று வேலூர் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காட்பாடி அடுத்த திருவலம் பகுதியில் உள்ள பஞ்சாயத்து கிளார்க் பிரபு என்பவரின் வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த சோதனையில் வங்கி பரிவர்த்தனை மற்றும் சொத்து தொடர்பான ஆவணங்கள், பிரபுவின் வருமானம் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி வெட்டி கொலை; போலீசார் விசாரணை

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
drug dealer hacked to in broad daylight; Police investigation

புதுச்சேரி கோவில் திருவிழாவில் கஞ்சா வியாபாரி ஒருவரை ஐந்து நபர்கள் வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

புதுச்சேரி மாநிலம் பெரிய நகர் பகுதியைச் சேர்ந்தவர் ருத்ரேஷ். அந்தப் பகுதியில் பிரபல ரவுடியாக வலம் வந்த இவர் மீது கொலை முயற்சி வழக்கு, கஞ்சா வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் பெரியார் நகர் கங்கையம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்று வரும் நிலையில் இன்று பால்குட ஊர்வலம் நடைபெற்றது. அதில் ருத்ரேஷின் தாய் மற்றும் தங்கை ஆகியோர் பால்குடம் எடுத்தனர். அதற்காக அங்கு ருத்ரேஷ் வந்திருந்த போது, கோவிலில் பதுங்கி இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் ருத்ரேஷை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொடூரமாக படுகொலை செய்தனர்.

பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி பால் குட ஊர்வலத்திலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக உருளையன்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவரது உடல் தற்போது பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பட்டப்பகலில் கஞ்சா வியாபாரி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.