Skip to main content

’சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்;நிஜத்தில் முடியாது’- விஜய் மீது தமிழிசை கடும் தாக்கு

Published on 05/11/2018 | Edited on 05/11/2018
vv

 

விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்தின் வெற்றிக்கு உழைத்ததில் பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனின் பெரும் பங்கு இருந்தது. அந்தப்படம் குறித்து அவர் கூறிய கருத்துக்கள்,  எதிர்ப்புகள் அந்தப்படத்தின் வெற்றிக்கு பெரிதும் உதவின.    இந்நிலையில் மீண்டும் விஜய் நடித்து நாளை திரைக்கு வரும் சர்கார் படம் குறித்து தமிழிசை தனது கடுமையாக தாக்கியுள்ளார்.

 

ta

 

கதை திருட்டு விவகாரத்தில் சிக்கி, செங்கோல் கதையின் கருவும்,  சர்கார் கதையின் கருவும் ஒன்றுதான் என்று இயக்குநர் ஏ.ஆர்.முருகதாசும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், 

 

’கள்ளக்கதை மூலம் படம் எடுப்பவர்கள் கள்ள ஓட்டு பற்றி படம் எடுத்திருக்கிறார்கள்.  சினிமாவில் விஜய் நேர்மையாக இருக்க வேண்டும்.  இது கார்ப்பரேட்களுக்கான ஆட்சி இல்லை.  காமன்மேன்களுக்கான ஆட்சி.  முதல்வர் கனவோடு நடிக்கிறவர்கள் திரையில்தான் ஆட்சி செய்ய முடியும்.   சினிமாவில்தான் சர்கார் அமைக்க முடியும்; நிஜத்தில் முடியாது’’என்று கடுமையாக தாக்கியுள்ளார்.   
 

 

 

சார்ந்த செய்திகள்