Skip to main content

"கன்னத்திலே தடவாதே... மத்திய அரசே..." - வேல்முருகன்

Published on 18/04/2018 | Edited on 18/04/2018

இன்று 'தமிழர் வாழ்வுரிமைக் கட்சி' வேல்முருகன், ஆளுநரை திரும்பப் பெறக் கோரி  சென்னையில் நடத்திய ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் பேசியவர்,   
 

velmurugan



"இவ்வளவு செய்திகள் வந்த பின்பும் இந்த உயர்நீதிமன்றங்கள் மௌனமாக இருக்கின்றன. நீங்களே வந்து சுயோ மோட்டோ (suo moto) ஆக இதற்கு விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்ட அந்த நான்கு பெண்கள், அந்த பெண்களின் பெற்றோர்கள் தற்போது இந்த அவலத்தினால் பல பதற்றங்களில் மன உளைச்சலில் இருப்பார்கள்.  பேராசிரியர் நிர்மலாதேவியின் மூலமாக அந்த பெண்களுக்கு படிப்பு, பணம் போன்ற பலவற்றை ஆசை காட்டியிருக்கிறார்கள். அவருக்குப் பின்னால் இருக்கும் சூச்சுமத்தைக்  கண்டுபிடிக்க வேண்டும். அவர் சென்ற பல்கலைக்கழகம், காமராஜர் பல்கலைக்கழகம். அதன் துணை வேந்தராக நியமிக்கப்பட்டிருப்பவர் மீதே கிரிமினல் வழக்கு இருக்கிறது. ஆனால், அவரை சட்டத்துக்கு புறம்பாக நியமித்திருக்கிறீர்கள். 

துணைவேந்தர்கள் எதற்காக வடக்கிலிருந்து வருகிறீர்கள்? சட்ட பல்கலைக்கழகத்தில் தமிழர்கள் யாரும் தகுதியானவர்கள் இல்லையா? எவ்வளவு பெரிய நீதியரசர்கள், வழக்கறிஞர்களைக் கொண்டுள்ள தமிழ் சமூகத்தில் ஒருவருக்கும் துணை வேந்தர் தகுதி, பதவி கிடையாதா? அண்ணா பெயரில் இருக்கும் பல்கலைக்கழகத்திற்கே நீங்கள் துணை வேந்தரை மத்திய பிரேதசத்தில் இருந்து நியமிக்கிறீர்கள். ஏன் இசைக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணித்த எங்கள் கருப்பு இனத்தின் புஷ்பவன குப்புசாமிக்கு இசைப் பல்கலைக்கழகத்தில் பதவி கிடையாது, அதற்கு கேரளத்தை சேர்ந்தவர்களுக்கு பதவி கொடுப்பீர்கள்? ஏன் என்றால் நாங்கள் எல்லாம் கருப்பு தோல், அவர்கள் சிவப்பு தோல் என்று. சிவப்பு தோலை பார்த்தாலே உங்களுக்கு எல்லாம் ஒரு மாதிரியாகத்தான் இந்த வடநாட்டுக்கும்பலுக்கு இருக்கிறது. வடநாட்டு கும்பலே நாங்கள் உங்களை எச்சரிக்கிறோம்.
 

velmurugan protest



மத்திய அரசே, எங்கள் நீதியரசர் தலைமையில் நடக்கும் விசாரணைக்கு சிபிஐ துணையாக இருக்க வேண்டுமே தவிர, அது ஒருமையாக இருந்துவிட கூடாது. சிபிஐ ஆளுநரை காப்பாற்றுவதற்கோ, ஊழலை மறைப்பதற்கோ இருக்க கூடாது. இதுவரை இந்த ஆளுநரால் நியமிக்கப்பட்டவர் அனைவருக்கும் பதவியை ரத்து செய்ய வேண்டும். நேர்மையான நீதியரசர்களை, நடைமுறையில் இருக்கும் வழக்கறிஞர்களை கொண்டு விசாரணை குழு அமைக்கப்பட்ட வேண்டும். இந்த வழக்கில் பின்னால் இருப்பவர்கள் யார், இந்த ஆள் பிடிப்பவர்கள் வேலை செய்பவர் யார், அனைத்தையும் இந்த வெளியுலகத்திற்கு கொண்டு வந்து காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இது அனைத்தும் நடக்க வேண்டும் என்றால் இங்கு புரோகிதர் ஆளுநராக இருக்க கூடாது. நரேந்திர மோடியே நீ நியாயமானவராக இருந்தால், எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றால், எங்கள் பெண்களுக்கு இழுக்கு ஏற்படுத்தியவர்களை கண்டுபிடிக்க வேண்டும் என்றால் உடனடியாக இந்த புரோகிதரை நீக்க வேண்டும் என்று கோரிக்கையை முன் வைத்து தமிழர் வாழ்வுரிமை கட்சி பேரணியை தொடர்கிறது", என்று முடித்துவிட்டு "மத்திய அரசே... மத்திய அரசே... பெண் பத்திரிகையாளர்களை தொடாதே... தடவாதே.. தடவாதே... கன்னத்தில் தடவாதே" என்று கோஷமிட்டனர்.      

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case against PM Modi adjourned

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கை வழக்கறிஞர் ஆனந்த் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

இந்த வழக்கு இன்று (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. இந்நிலையில் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை வரும் திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.