Skip to main content

ஊழல் முறைகேடு தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி  போராட்டம்

Published on 18/08/2020 | Edited on 18/08/2020
struggle

 

 

திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் எல்ராம்பட்டு ஊராட்சியில் 2013-14 ஆம் ஆண்டில் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியம் முழுவதும் பிரதமர் வீடு கட்டும் திட்டம் மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டங்களில் நடைபெறும் முறைகேடுகளை களைய நடவடிக்கை எடுக்க கோரியும் பிரதமரின் கிஷான் திட்டத்தில் திருக்கோவிலூர் ஒன்றியத்தில் இடைதரகர்கள் மூலம் நடைபெற்றுள்ள முறைகேடுகள்  குறித்து விசாரிக்கவும் தொடர்புடைய நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எல்ராம்பட்டு கிளை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக முன்பு நடைபெற்றது.

 

இதில் கிளை துணை செயலாளர் வடமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.வி.சரவணன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

 

 

சார்ந்த செய்திகள்