Skip to main content

யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் எனக்கு கவலை இல்லை - தம்பிதுரை

Published on 29/03/2019 | Edited on 29/03/2019

கரூர் தொகுதியில் பிரச்சாரத்திற்கு வந்த அ.தி.மு.க.வேட்பாளர் தம்பிதுரையிடம் குடிநீர் பிரச்சனை பற்றி கேட்ட பொதுமக்களிடம் ஆவேசம் அடைந்த அவர், நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் எனக்கு கவலை இல்லை என்று எரிச்சலுடன் சொன்ன பதிலால் அப்பகுதி பொதுமக்கள் அதிருப்தி அடைந்தனர்.

 

Thambidurai loksabha  election campaign

 

கரூர் தொகுதியின் அ.தி.மு.க. எம்.பி. வேட்பாளரும், தற்போதைய லோக்சபா துணை சபாநாயகருமான தம்பிதுரை கரூர் தாந்தோணி கிழக்கு, மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட புலியூர், உப்பிடாமங்கலம், பொரணி, ஏமூர், ஏமூர் புதுகாலனி, சுக்காலியூர் ஆகிய ஊர்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
 

அப்போது வாக்காளர்களிடம் பேசிய அவர் காங்கிரஸ் தலைவர் ராகுலால் எப்போதும் பிரதமராக முடியாது. இனி இந்தியாவின் நிரந்தர பிரதமர் மோடிதான். ஆகவே கை சின்னத்தில் ஓட்டு போட்டு உங்களின் வாக்குகளை வீணாக்காதீர்கள், மேலும் தமிழக ஆட்சி அதிகாரம் எங்களிடம்தான் உள்ளது. இனி வரும் காலங்களில் மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் தொடர வேண்டுமானால் பொது மக்களாகிய நீங்கள் எங்களுக்கு மட்டுமே ஆதரவு அளித்து உங்கள் வாக்குகளை எங்களுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என பேசினார். 

 

ஏமூர் புதூர் காலனியில் பேசியபோது குறுக்கிட்ட பொதுமக்கள் முதலில் எங்கள் பகுதியில் நிலவிவரும் குடிநீர் பிரச்சனையை தீர்த்து வையுங்கள் என்று கோஷமிட்டனர். உடனே ஆவேசம் அடைந்த தம்பிதுரை ஓட்டு கேட்பது எங்கள் கடமை, ஓட்டு போடுவதும், போடாததும் உங்கள் உரிமை அதனால் நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் ஒட்டு போடுங்கள் எங்களுக்கு கவலை இல்லை என்று அலட்சியத்துடன் பேசியதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சியும், அதிருப்தியும் அடைந்து கலைந்து சென்றனர். 

 

தம்பிதுரையின் இப்பேச்சினால் அ.தி.மு.க.நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிருப்தி அடைந்து முணுமுணுத்தவாறு சென்றனர். இப்பிரச்சாரத்தில் கிருஷ்ணராயபுரம் எம்.எல்.ஏ.கீதா, பி.ஜே.பி.லோக்சபா பொறுப்பாளர் சிவசாமி, பி.ஜே.பி. மாவட்ட தலைவர் முருகானந்தம், தே.மு.தி.க.மாவட்ட தலைவர் தங்கவேல் உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.