Skip to main content

தமிழக பட்ஜெட்டிலும் நுழைத்துள்ளது மத்திய பாஜக அரசு - வேல்முருகன் கண்டனம்

Published on 09/02/2019 | Edited on 09/02/2019
ops


டெல்லியின் விருப்பப்படியே, எந்த வகையிலும் அதன் மனம் கோணாதபடி ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து, தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு! என்று கண்டனம் தெரிவித்துள்ளார் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

 

தமிழகத்தை, தமிழினத்தைக் கருவறுக்கும் நோக்கில் இயங்குவன பாஜகவும் அதன் டெல்லி மத்திய அரசும். சட்டமன்றப் பெரும்பான்மை இல்லாத எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசை, அரசமைப்புச் சட்டம் மற்றும் தமிழக மக்களின் உணர்வுக்கு எதிராக, அறம் பிறழ்ந்து நேர்மையற்ற முறையில் நீடிக்கச் செய்திருக்கிறது. இதன் மூலம் தனது பாசிச, பிற்போக்கு நடவடிக்கைகளை நிறைவேற்றிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில், தமிழக ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும்கூட தன் கொடுங்கரத்தை நுழைத்துள்ளது மத்திய பாஜக அரசு. இது, இந்த பட்ஜெட்டை பாஜக ஆதரிப்பதிலிருந்தே தெளிவாகிறது.
 

 

நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த நிதிநிலை அறிக்கையில், இந்த ஆண்டின் நிலுவைக் கடன் ரூ.3.97 லட்சம் கோடி. சென்ற ஆண்டு இருந்த  3.56  லட்சம் கோடியுடன் 41 ஆயிரம் கோடி ரூபாய் கடன்  அதிகரித்துள்ளது. கடனில் காலத்தை ஓட்டும் ஓர் அரசு, மக்களுக்கு நன்மை என்ன செய்ய முடியும் என்பதுதான் கேள்வி!
 

2018-19ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீட்டில் தமிழகத்தின் மொத்த வருவாய் ரூ.1,80,618.71 கோடி; செலவினங்கள் ரூ.1,99,937.33 கோடி; பற்றாக்குறை ரூ.19,319.02 கோடி. 2019-20ஆம் ஆண்டில், மாநில மொத்த வருவாய் ரூ.1,97,721.17 கோடியாக இருக்கும்; செலவினம் ரூ.2,12,035.93 கோடி; பற்றாக்குறை ரூ.14,314.76 கோடியாக இருக்கும். இதுதான் இந்த நிதிநிலை அறிக்கையின் ஒட்டுமொத்த சாரம்.
 

இந்தக் கடனும் பற்றக்குறையும் ஏற்பட்டதெப்படி? மத்திய அரசின் உதய் திட்டத்தால் 22,815 கோடி கடன்; 7ஆவது ஊதியக்குழு பரிந்துரை, மத்திய அரசின் குறைவான நிதிப்பகிர்வு, வரி வருவாயில் ஏற்பட்ட இழப்பு, மாநிலங்களுக்கான வரிவிதிப்பு அதிகாரம் குறைப்பு போன்றவற்றாலேயே இந்த நிதிப் பற்றாக்குறையும் கடனும். இது பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.
 

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையொட்டியாவது விவசாயப் பயிர் கடன் தள்ளுபடி, கரும்பு, நெல் கொள்முதல் விலை உயர்வு, அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஓய்வூதிய பலன், வயதானவர்கள், மாணவர்களுக்கு குறைந்தபட்ச நிதியுதவி என்று எதிர்பார்த்ததில் மண்தான் விழுந்திருக்கிறது.
 

கஜா புயல் நிவாரண நிதியாக ரூ.15,000 கோடி கோரியதில் மத்திய அரசு அறிவித்தது வெறும் 1100 கோடி. இதனை இந்த பட்ஜெட் தட்டிக்கேட்கவுமில்லை, குற்றம்சாட்டவுமில்லை. அடிப்படையான பள்ளிக் கல்வித்துறைக்கு மக்கள் பெருக்கத்தின் அடிப்படையில் நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்படவில்லை. உயர் கல்வித்துறைக்கு சென்ற ஆண்டைவிட சற்று கூடுதலாக நிதி ஒதுக்கப்பட்டிருப்பினும் இது போதவே போதாது. அதேபோல் விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி இல்லாமல் பொதுவான திட்ட ஒதுக்கீட்டை சற்றே கூட்டியிருப்பதால் எந்த பலனும் விளையாது.
 

வேலைவாய்ப்பிற்கான எந்தத் திட்டங்கள் பற்றியும் பட்ஜெட்டில் அறிவிக்கப்படாததுதான் உள்ளதிலேயே பெருத்த ஏமாற்றம். ஒரு கோடிக்கும் மேல் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்திருப்பவர்கள் மற்றும் 60 லட்சம் பொறியியல் பட்டதாரிகளைப் பற்றி இந்த பட்ஜெட் கவலைப்படவே இல்லை.
 

இதையெல்லாம் பார்க்கும்போது, மக்களைப் பற்றிய கவலையே இல்லாமல், தங்களைப் பற்றி, தங்களின் சுயநலத்தைப் பற்றி மட்டுமே உள்ள கவலையால் டெல்லியின் விருப்பப்படியே, எந்த வகையிலும் அதன் மனம் கோணாதபடி ஒரு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்து தொடர்ந்து தமிழகத்துக்குத் துரோகமிழைத்துள்ளது எடப்பாடி பழனிசாமியின் அதிமுக அரசு! இவ்வாறு கூறியுள்ளார். 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.