Skip to main content

“அதிமுக எனும் ஆலமரத்தை வீழ்த்தி குளிர்காய்கிறது பாஜக- உமர் பாரூக் விமர்சனம் 

Published on 04/02/2023 | Edited on 04/02/2023

 

spdi umar faruk talk about admk and bjp

 

பாரதிய ஜனதா கட்சி என்கிற ஆக்டோபஸ் அதிமுக என்ற ஆலமரத்தை வீழ்த்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது என எஸ்டிபிஐ கட்சியின் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தெரிவித்துள்ளார். 

 

எஸ்டிபிஐ கட்சியின் கரூர் மாவட்ட செயற்குழு கூட்டம் கரூர் அடுத்த பள்ளப்பட்டி பகுதியில் உள்ள தனியார் கூட்டரங்கில் மாநில பொதுச் செயலாளர் உமர் பாரூக் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கட்சியின் திருச்சி மண்டல தலைவர் ஹஸ்ஸான் பைஜி, மாநில வர்த்தக பிரிவு செயலாளர் ஸாலாஹூத்தீன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகமது அலி ஜின்னா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். 

 

கூட்டத்தின் நிறைவில் செய்தியாளர்களைச் சந்தித்த உமர் பாரூக், “ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எங்கள் மாநில தலைவரைச் சந்தித்து ஆதரவு கேட்டதால் எஸ்டிபிஐ கட்சி எடுத்த முடிவின்படி இடைத் தேர்தலில் களம் இறங்கி பணியாற்றும். மத்திய பட்ஜெட் உப்பு புளி இல்லாத மக்கள் நலனின் அக்கறை இல்லாத பட்ஜெட் ஆக உள்ளது. அதானி இந்த நாட்டை சூறையாடியது. உலக அரங்கில் பிரதமர் மோடியை பற்றி குஜராத் கலவர வழக்கு  மூலம் அவரைப் பற்றிய உண்மை தகவல் வெளிவந்து விட்டது. இந்த வேளையில் எதையாவது கூறி பட்ஜெட்டில் திசை திருப்ப நினைத்தும் அதில் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என்பது வெட்ட வெளிச்சம் ஆகியுள்ளது” என்றார்.

 

காஷ்மீர் பைல்ஸ் படத்திற்கு பதிலாக பிபிசி ஆவணப்படம் வெளி வந்ததாக கூறப்படுகிறது. அது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற செய்தியாளரின் கேள்விக்கு, “காஷ்மீர் பைல்ஸ் கற்பனையான ஒரு திரைப்படம். ஆனால் பிபிசி வெளியிட்டுள்ளது உண்மைகளின் அடிப்படையில் வெளியிட்ட உள்ள ஒரு ஆவணம்” எனப் பதிலளித்தார். 

 

மேலும், “அதிமுகவை பற்றி குறிப்பிடும் போது எம்ஜிஆர் - ஜெயலலிதா ஆகியோரால் வளர்க்கப்பட்ட அந்த ஆலமரமாகிய  அதிமுகவை பிஜேபி என்கிற ஆக்டோபஸ் வீழ்த்தி குளிர் காய்ந்து கொண்டிருக்கிறது. எடப்பாடியும், பன்னீர்செல்வமும் பிஜேபியை விரும்பினாலும் அதிமுக தொண்டர்கள் பிஜேபியை விரும்ப மாட்டார்கள். இன்று அதிமுக ஓபிஎஸ், இபிஎஸ், சசிகலா, தினகரன் என நான்கு அணிகளாக பிரிந்து கிடக்கிறது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த அதிமுக மீண்டும் தமிழகத்தில் ஒரு பலமான கட்சியாக செயல்பட வேண்டும் என்பதே எஸ்டிபிஐ கட்சியின் விருப்பம். எனவே ஓபிஎஸ், இபிஎஸ்ஸும் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.