Published on 28/06/2021 | Edited on 28/06/2021
![ddd](http://image.nakkheeran.in/cdn/farfuture/L5qnhqFabX4iTlOND5k1QfgD6yGzdup3ifVe4UTpOKw/1624867609/sites/default/files/inline-images/600_138.jpg)
ஆபாசமாக பேசி சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுவரும் ரவுடிபேபி சூர்யா, ஜி.பி.முத்து, சுகந்தி சகோதரிகள், சாதானா, திவ்யாக்களின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார்கள் எழுந்தது. இதுகுறித்து நக்கீரன் ஜூன் 23-25 இதழில் வெளியிட்டிருந்தோம்.
இந்த புகார் தொடர்பான வழக்கு இன்று திருப்பூர் முதன்மை அமர்வு நீதிபதி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பேதாது நீதிபதி காவல்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், ரவுடி பேபி சூர்யா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அந்த யூடியூப் சேனலை முடக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் உத்தரவிட்டுள்ளார்.