Skip to main content

ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீனில் விடுதலை? -உச்ச நீதிமன்றத்தின் கோபம் சாதகமா?

Published on 09/01/2022 | Edited on 09/01/2022

 

 Rajendrapalaji released on bail? -Is the anger of the Supreme Court positive?

 

ஆவின் மற்றும் அரசுத்துறைகளில் வேலை வாங்கித்தராமலும், கட்சிப் பணிகளுக்காகச் செலவழித்த பணத்தைத் திருப்பித் தராமலும்  ரூ.3 கோடி வரை மோசடி செய்தார் என முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி மீது அதிமுக முன்னாள் ஒ.செ.விஜயநல்லதம்பி அளித்த புகார் வழக்காகப் பதிவானது. இந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் ராஜேந்திரபாலாஜி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியானது. இதனைத் தொடர்ந்து,  உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது.

 

அந்த மேல்முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவிருந்த நிலையில், ஒருநாள் முன்னதாக 5-ஆம் தேதி கர்நாடகா-ஹாசனில் ராஜேந்திரபாலாஜி கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். 

 

‘வானம் இடிந்து விழவா போகிறது?’ – கோபத்தின் உச்சம்!

 

 Rajendrapalaji released on bail? -Is the anger of the Supreme Court positive?

 

6-ஆம் தேதி,  ராஜேந்திரபாலாஜியின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது, ராஜேந்திரபாலாஜி அவசர அவசரமாக கைது செய்யப்பட்டுள்ளார் என, அவரது சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே குறிப்பிட, நீதிபதிகள் ‘இந்த மனு விசாரணைக்கு வருவது தமிழக அரசுக்கு தெரியாதா? அவசர அவசரமாக ராஜேந்திரபாலாஜியைக் கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன? இந்த விசாரணைக்கு காத்திராமல் அவசரமாக கைது செய்யாவிட்டால் வானம் இடிந்தா விழப்போகிறது? இந்தக் கைது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் செய்யப்பட்டதா?’ என்றெல்லாம் கேள்விகள் எழுப்பினர். 

 

இனிமேல்தான் ஹைலைட்!

 

 Rajendrapalaji released on bail? -Is the anger of the Supreme Court positive?

 

ராஜேந்திரபாலாஜியின் வழக்குகளில் ஆஜரானார் என்பதற்காக வழக்கறிஞர் மாரீஸ்குமார் வீட்டில் காவல்துறையினர் சோதனை நடத்தியது ஏற்கத்தக்கதல்ல என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வேறு சுட்டிக்காட்டியது. இந்த நிலையில் வழக்கறிஞர் மாரீஸ்குமார் “முதலில் மோசடி புகாரளித்த ரவீந்திரனே, நான் ராஜேந்திரபாலாஜியை பார்க்கவே இல்லை. அவரிடம் பணம் கொடுக்கவும் இல்லை. இதையெல்லாம் பண்ணியது நல்லதம்பிதான் என்று உச்ச நீதிமன்றத்தில் ஸ்டேட்மெண்ட் ஃபைல் பண்ணிருக்காரு. அடுத்துவரும் விசாரணையில், இதுதான் ஹைலைட். யாரால் புகார் கொடுக்கப்பட்டு பொய் வழக்கு புனையப்பட்டதோ, அவரே உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக காவல்துறை மற்றும் விஜயநல்லதம்பியால் தொடுக்கப்பட்ட பொய்யான வழக்கு என்பதற்கு இது பாசிடிவாக இருக்கிறது. ராஜேந்திரபாலாஜியை மட்டும் கொடுமைப்படுத்தவில்லை. வழக்கறிஞரான என்னையும் கொடுமைப்படுத்தினார்கள். பெயில் போடுவதற்காக நீதிமன்றம் வந்தபோது, காரணம் எதுவும் கூறாமல், என்னை ஒரு மணி நேரம் சிவகாசி காவல் நிலையத்தில் கொண்டுபோய் உட்காரவைத்தார்கள். பலரும் அழைத்துப் பேசியபிறகே, என்னை விட்டார்கள். ஒரு வழக்கறிஞரின் மொத்த உரிமையையும் திமுக அரசு தடுத்து நிறுத்தப் பார்க்கிறது. இது சர்வாதிகார ஆட்சி. பார் கவுன்சில் வரை புகார் அளித்திருக்கிறேன். இது ஒரு வழக்கறிஞருக்கான பிரச்சனை மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த வழக்கறிஞர்களுக்குமான பிரச்சனை. வழக்கறிஞர்களை தொந்தரவு செய்யும் திமுக அரசைக் கண்டித்து, நீதிமன்றம் மூலம், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம்.” என்று கூறியிருக்கிறார். 

 

ஏழைகளை ஏமாற்றும் செயல்!

 

 Rajendrapalaji released on bail? -Is the anger of the Supreme Court positive?

 

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் பதில் மனுவில் ‘ராஜேந்திர பாலாஜி விவகாரத்தில் எந்தவித அரசியல் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. ராஜேந்திர பாலாஜி மீது தொடர்ந்து மோசடி புகார்கள் வந்துகொண்டே இருக்கின்றன. பாதிக்கப்பட்டவர்களின் புகாரின் அடிப்படையிலேயே, சட்டரீதியான நடவடிக்கைக்காக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரமானது, வேலைக்காகக் காத்திருக்கும் ஏழை மற்றும் நடுத்தர மக்களை ஏமாற்றும் செயலாகும். அவர்களின் அறியாமையைப் பயன்படுத்தி மோசடி செய்ததாகும். எனவே,  இதை சாதாரணமாகக் கடந்துபோக முடியாது. தற்போதைய நிலையில், 10 ஆண்டுகள் அமைச்சராக இருந்த ராஜேந்திர பாலாஜிக்கு ஏதாவது நிவாரணம் வழங்கப்பட்டால், அது வழக்கின் சாட்சிகளை அச்சுறுத்தும். அது வழக்கின் விசாரணையை பாதிக்கும். அதனால்,  தன் மீது பதிவான மோசடி வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று ராஜேந்திர பாலாஜி தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு மற்றும் ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்யவேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளனர். ஆனாலும், ராஜேந்திரபாலாஜி வழக்கின் போக்கை உற்றுநோக்கும் நீதித்துறை வட்டாரத்தில் “இந்த வழக்கில் அரசுத் தரப்பு ரொம்பவே சொதப்பிவிட்டது. வேண்டுமென்றால் பாருங்கள் – நாளைக்கே (10-ஆம் தேதி) ராஜேந்திரபாலாஜிக்கு ஜாமீன் கிடைப்பதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது” என்று அடித்துச் சொல்கிறார்கள். 

 

ராஜேந்திரபாலாஜி விடுதலையாவாரா என்பது, மேல்முறையீட்டு மனு மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பில் தெரிந்துவிடும்.   

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.