Skip to main content

நாடாளுமன்றத் தேர்தலில்.... வேல்முருகன்

Published on 09/03/2019 | Edited on 09/03/2019
 velmurugan



தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாநில சிறப்பு பொதுக்குழு கூட்டம் 10.03.2019 ஞாயிற்றுக்கிழமை, (நாளை) மாலை 6.00 மணியளவில்  நெய்வேலியில் நடைபெறுகிறது. மங்கையர்கரசி திருமண மகால், வடலூரில் நடைபெறும் இக்கூட்டத்தில் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர ,பேரூர் நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் பங்கேற்க உள்ளனர்.


நாடாளுமன்ற தேர்தல் 2019 குறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் அடுத்த கட்ட செயல்பாடுகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இக்கூட்டத்தின் முடிவுகளை மாலை7.00 மணியளவில் செய்தியாளர்களை சந்தித்து விளக்க உள்ளதாக அக்கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார். 
 

 

 

சார்ந்த செய்திகள்