Skip to main content

“ஓ. பன்னீர் செல்வம் விரக்தியில் இல்லை” - அண்ணாமலை

Published on 02/08/2023 | Edited on 02/08/2023

 

O Panneerselvam is not in despair Annamalai

 

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் விரக்தியில் இல்லை என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

 

தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'என் மண்; என் மக்கள்’ என்கிற பெயரில் கடந்த 28 ஆம் தேதி இராமேஸ்வரத்திலிருந்து ஊழலுக்கு எதிரான நடைப்பயணத்தைத் துவங்கி இருக்கிறார். இந்த நடைப்பயணத்தை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். இதில் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். அண்ணாமலை நடத்தும் இந்தப் பாதயாத்திரை மூலம் தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் பொதுக்கூட்டம் நடத்தப்படும் எனவும், ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் ஒரு மத்திய அமைச்சர் பங்கேற்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், அண்ணாமலை தற்போது தனது பாதயாத்திரையைப் புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொண்டு வருகிறார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கொடநாடு வழக்கில் நடவடிக்கை எடுக்க அரசு மற்றும் போலீஸ் இருக்கிறது. ஓ. பன்னீர்செல்வம் விரக்தியில் இல்லை. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் யாரையும் ஒதுக்கவில்லை. அதிகாரப்பூர்வமாக அதிமுகவுடன் பாஜக கூட்டணியில் இருக்கிறது” எனத் தெரிவித்தார். 

 

 

சார்ந்த செய்திகள்