Skip to main content

கொடிக்கம்பங்களை அகற்ற அதிகாரம் இல்லை -  உயர்நீதிமன்றம் உத்தரவு 

Published on 06/03/2018 | Edited on 06/03/2018

 

dmk flag

 

தூத்துக்குடியில் தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கோ அதில் தலையிடுவதற்கோ யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை என உயர்நீதிமன்றம் மதுரை கிளை இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சார்பில் மு.க.ஸ்டாலின்  பிறந்தநாளை முன்னிட்டு கடந்த 24.02.2018ம்தேதி வாகைக்குளம் விமான நிலைய சாலை அருகே, இந்திய உணவுக்கழக குடோன் எதிரே, புதூர்பாண்டியாபுரம் சுங்கச்சாவடி அருகே என தனியாருக்கு சொந்தமான இடங்களில் திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிகள் ஏற்றப்பட்டது.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் திரு.வெங்கடேஷ் அவர்களின்  உத்தரவின்பேரில் தூத்துக்குடி வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் வருவாய்த்துறையினர் கடந்த 27.02.2018ம் தேதி எந்தவித முன்அறிவிப்பும் இன்றி அதிகாலை 1.30மணி அளவில் திமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்ட தனியாருக்குரிய இடங்களுக்குள் அத்துமீறி நுழைந்து விலை உயர்ந்த துருப்பிடிக்காத கொடிக்கம்பி கயிறுகளையும், இருவண்ணக்கொடியையும் கிழித்து எறிந்து, கொடிக்கம்பி கயிறுகளை திருடிச்சென்று விட்டனர்.

இதற்கிடையே தூத்துக்குடி சார்-ஆட்சியர் கடந்த 01.03.2018ம்தேதி அன்று திமுக கொடிக்கம்பம் அமைக்கப்பட்ட இடங்களின் உரிமையாளர்களுக்கு குற்றவியல் நடைமுறைச்சட்டம் பிரிவு 133ன்படி 07.03.2018ம் தேதிக்குள் கொடிக்கம்பங்களை அகற்றிடவேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

 

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் முறையற்ற இந்த தன்னிச்சையான செயலுக்கும், தூத்துக்குடி சார்-ஆட்சியர் பிறப்பித்துள்ள உத்தரவிற்கும் தடை விதிக்ககோரி திமுகவின் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் எஸ்.ஜோயல் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் தனித்தனியாக வழக்கு தாக்கல் செய்தார்.

 

இந்த வழக்கின் விசாரணை இன்று(06.03.2018) நடைபெற்றது. வழக்கின் விசாரணையை தொடர்ந்து  நீதியரசர் ராஜமாணிக்கம் ., "தூத்துக்குடியில் தனிநபருக்கு பாத்தியப்பட்ட இடங்களில் அமைக்கப்பட்டுள்ள திராவிட முன்னேற்றக்கழகத்தின் கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கோ அதில் தலையிடுவதற்கோ யாருக்கும் எந்தவிதமான அதிகாரமும் இல்லை. இந்த கொடிக்கம்பங்களை அகற்றும் அதிகாரம் மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது மாவட்ட நிர்வாகத்தின் கீழ் பணியாற்றும் அதிகாரிகளுக்கோ, மாவட்ட காவல்கண்காணிப்பாளருக்கோ அல்லது அவருக்கு கீழ்பணியாற்றும் காவல்துறையினருக்கோ இல்லை. எனவே இந்த கொடிக்கம்பங்களை அகற்றுவதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது" என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘பதஞ்சலியின் மன்னிப்பை லென்ஸ் வைத்து தேட வேண்டியுள்ளது’ - உச்சநீதிமன்றம் கண்டனம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Supreme Court condemns on Patanjali's apology needs to be looked at with a lens

ஆங்கில மருத்துவம் தொடர்பாக தவறான தகவல்களை விளம்பரம் செய்ததற்காக பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இதனையடுத்து இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு பதஞ்சலி நிறுவனர் பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு கடந்த 2 ஆம் தேதி (02.04.2024) விசாரணைக்கு வந்தது. அப்போது ராம்தேவும், பாலகிருஷ்ணாவும் நேரில் ஆஜராகி மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும், அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி இருப்பதாகவும் வழக்கறிஞர் கூறினார். இவ்வாறு தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த 16ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பாபா ராம்தேவ் மற்றும் ஆச்சார்யா பால்கிருஷ்ணா ஆகியோர் பதஞ்சலி ஆயுர்வேதத்தின் தவறான விளம்பரங்கள் தொடர்பான விசாரணையில் கலந்து கொள்ள உச்ச நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது ராம்தேவ் பகிரங்க மன்னிப்பு கேட்க தயாராக இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி தெரிவித்தார்.

இதனையடுத்து பாபா ராம்தேவ் உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை மீறி விளம்பரம் செய்ததற்காக நேரில் ஆஜாராகி மன்னிப்பு கேட்டார். அப்போது, “தவறாக கொடுத்த விளம்பரத்தை நியாயப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்றத்தில் அளித்த உறுதியை எதிர்காலத்தில் மீற மாட்டேன். பொது மன்னிப்பு கேட்க தயாராக இருக்கிறேன்” என ராம்தேவ் உறுதியளித்தார். இதனையடுத்து மனுதாரர்கள் தரப்பில் கால அவகாசம் கோரப்பட்டதால் வழக்கு விசாரணை 23 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று (23-04-24) நடைபெற்றது. அப்போது. ராம்தேவ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘பதஞ்சலி நிறுவனம் 61 நாளேடுகளில் பகிரங்க மன்னிப்பு கோரி விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக’  தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், ‘பதஞ்சலி நிறுவனம் வெளியிட்ட விளம்பரத்துக்கு இணையாக, அதே அளவில் மன்னிப்பு இருந்ததா?. பதஞ்சலி நிறுவனம் மன்னிப்பு கோரும் விளம்பரங்களை லென்ஸ் வைத்து தேடும் அளவுக்கு சிறிதாக உள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தின் விளம்பரங்களை இது போல் சிறிய அளவில் தான் செய்வீர்களா?. பொருளை விளம்பரப்படுத்துவது போல், மன்னிப்பும் பெரிய அளவில் வரும் ஏப்ரல் 30ஆம் தேதிக்குள் விளம்பரங்களை வெளியிட வேண்டும்’ என்று கண்டனம் தெரிவித்து இந்த வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். மேலும், தவறான விளம்பரத்தை வெளியிட்ட பதஞ்சலி நிறுவனத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத மத்திய அரசின் செயல் அதிருப்தியாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.

Next Story

முல்லைப் பெரியாறு அணை விவகாரம்; தமிழக அரசு அதிரடி முடிவு!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Mullai Periyar Dam Issue TN govt decision

முல்லைப் பெரியாறு அணைப்பகுதியில் மிகப்பெரிய நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கும் பணியில் கடந்த 2013 ஆண்டு முதல் கேரள அரசு ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து முல்லைப் பெரியாறு அணையின் நீர்த்தேக்கப் பகுதிகள் தமிழகத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருப்பதால், அதில் கட்டுமானப் பணிகள் நடைபெறும் பகுதியில் கட்டுமான பணிகள் மேற்கொள்ள அனுமதி இல்லை என்று தெரிவித்தும், கேரளா அரசின் முடிவை எதிர்த்தும் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிபதி, “நில அளவை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்படும் மேற்பார்வைக் குழுவின் தலைமையில் கேரளா மற்றும் தமிழகத்தை உள்ளடக்கிய கூட்டு சர்வே நடத்த வேண்டும்” என தெரிவித்திருந்தார். இதனையடுத்து இது தொடர்பான அய்வு குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு உச்ச நீதிமன்றத்தில் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அந்த ஆய்வறிக்கையில், ‘கேரள அரசு கட்டிவரும் வாகன நிறுத்துமிடம் குத்தகை பகுதிக்குள் இல்லை. நீர்பிடிப்பு மற்றும் நீர் பரவல் பகுதியின் எல்லைகள் பெரியாறு, குமுளி கிராமத்தில் உள்ளன’ என வரைபடத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Mullai Periyar Dam Issue TN govt decision

இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணை பகுதியில் வாகன நிறுத்துமிடம் கட்டுவது தொடர்பாக இந்திய நில அளவைத் துறை அளித்த ஆய்வறிக்கையை ஏற்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், “கடந்த 1924 ஆம் ஆண்டு நீர்வளத்துறையால் தயாரிக்கப்பட்ட வரைபடத்தை தற்போதைய ஆய்வு குழு கணக்கில் கொள்ளவில்லை. கேரளா கட்டிவரும் மிகப்பெரிய வாகன நிறுத்துமிடத்தின் மூலப்பகுதி, தரைத்தளம் எங்கு உள்ளது என்பதை ஆய்வு குழு ஆய்வு செய்யவில்லை. வாகன நிறுத்துமிடத்தின் எல்லை நிர்ணயிக்கப்பட்ட போது தமிழ்நாடு அரசின் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை.

மெகா வாகனம் நிறுத்துமிடம் என்பது உணவகம், வாகன பேட்டரி சார்ஜ் செய்யும் இடம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை உள்ளடக்கியது ஆகும். எனவே வாகன நிறுத்துமிடத்தை அளவிடும் போது அதன் சார்பு வசதிகளை கணக்கில் எடுக்க நில அளவைத் துறை தவறிவிட்டது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.