Skip to main content

“எல். முருகன் செய்தது மிகப்பெரிய குற்றம்” - நாஞ்சில் சம்பத்!

Published on 17/07/2021 | Edited on 17/07/2021

 

"L. Murugan committed the biggest crime" - Sampath in Nanjil

 

தமிழ்நாட்டில் பாஜக தலைவராக இருந்த எல். முருகன், மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்னர் தமிழ்நாடு பாஜக துணைத் தலைவராக இருந்த அண்ணாமலை, தற்போது தமிழ்நாடு பாஜக தலைவராக பதவியேற்றுள்ளார். இவர் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. அதேபோல், இணையமைச்சராக பதவியேற்றுள்ள எல். முருகன், தனது பயோடேட்டாவில் கொங்கு நாடு என குறிப்பிட்டது மிகப்பெரிய பேசு பொருளாக உருவெடுத்தது. அதுகுறித்து திராவிட இயக்கப் பேச்சாளரும், சிந்தனையாளருமான நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்வி எழுப்பினோம். அவரது பதில்கள் பின் வருமாறு...  

 

எல். முருகன் மத்திய இணை அமைச்சராக பதவியேற்றார். அவருடைய பயோடேட்டா வெளியானது. அதில் கொங்குநாடு என்று குறிப்பிட்டுள்ளார் அதை எப்படி பார்க்கிறீர்கள்?

 

இது மிகப் பெரிய குற்றம், அவ்வாறு எழுதியிருக்கக் கூடாது. எல். முருகன் சட்டம் படித்தவர். அவர் இதனைப் போட்டுக்கொள்ள எவ்வாறு ஒப்புக்கொண்டார் என எனக்குத் தெரியவில்லை. காரணம், இந்திய வரைபடத்தில் கொங்குநாடு என்றொரு நாடு கிடையாது. இல்லாத ஒரு நாட்டை ரகசிய காப்புப் பிரமாணம், விஸ்வாசப் பிரமாணம் எடுத்து மத்திய இணை அமைச்சராக பொறுப்பேற்றுள்ளவர் போட்டிருப்பது மிகப் பெரிய குற்றம். இதற்காக இவர் மீது வழக்குப் பதிவு செய்வதற்கு ஆயிரம் முகாந்திரங்கள் இருக்கிறது. இதையெல்லாம் மத்திய உள்துறை அமைச்சர் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவைல்லை.

 

இந்தியாவின் வரைபடத்தில் இல்லாத ஒரு நாட்டை கொங்குநாடு என்று எழுதியிருப்பதன் மூலம் மிகப் பெரிய குற்றத்தைப் பிஜேபி கட்சியினுடைய தலைவராக இருந்த எல். முருகன் இன்று செய்திருக்கிறார். ஆகவே இது தமிழ்நாடு அரசுக்கு விடப்பட்டிருக்க அறைகூவலாக நான் கருதவில்லை. இந்திய தேசத்தினுடைய கட்டுமானத்திற்கே விடப்பட்ட அறைகூவலாக இதைப் பார்க்கிறேன். கொங்குநாடு என்று ஏற்கனவே பேச்சு வழக்கில் இருக்கிறது. அது நாஞ்சில் நாடு, பாண்டிநாடு, பல்லவ நாடு, தொண்டை நாடு, சேதுபதி சீமை, தென்பாண்டி நாடு இவ்வாறு தமிழகத்தில் பல இடங்களை நாம் நாடாக பேச்சு வழக்கில் கூறுவதுண்டு.

 

அதேபோல் இராமநாட்டுக்கு சென்றாலே அங்கு ஆப்பநாடு, அருவாநாடு, பாப்பா நாடு போன்ற பல நாடுகள் அங்கேயே இருக்கிறது. அதற்காக அந்த நாட்டுக்கு நூறு கொடி, அந்த நாட்டிற்கு என்று நூறு சாம்ராஜ்யமா? அதுவும் பிஜேபி கட்சியா இந்தப் பாவத்தை செய்வது. என்னால் இதையெல்லாம் பார்த்துவிட்டு தாங்கிக்கொள்ள முடியவில்லை. இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கிற கட்சி, இப்படி ஒரு மாவட்ட செயற்குழு கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் போடுவதற்கு அனுமதிக்கலாமா? என்னைக் கேட்டால் இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடிக்கும், இந்தியாவின் குடியரசுத் தலைவர் அவர்களுக்கும் ‘நான் சொல்வது, கொங்கு நாடு என்று மத்திய அமைச்சராக பொறுப்பேற்க போகிறவர் போட்டிருப்பது, சட்டத்தையும் இந்தியாவின் இறையாண்மையையும் மீறியிருக்கிறார். அதனால் அவரை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.     

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமராக்கள் செயலிழப்பு; நீலகிரியில் பரபரப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Malfunction of strong room CCTV cameras; Excitement in the Nilgiris

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.
 

தமிழகத்தில் தேர்தல் மக்களவை தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் வாக்கு பெட்டிகள் அனைத்தும் ஸ்ட்ராங் ரூம் எனப்படும் ஐந்து அடுக்கு பாதுகாப்பு அறைக்குள் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நீலகிரியில் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் திடீரென செயலிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

நீலகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அருகிலுள்ள அறையிலிருந்து கண்காணிப்பதற்காக அனைத்து அரசியல் கட்சியினருக்கும் பொதுவாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று மாலை திடீரென 173 சிசிடிவி கேமராக்கள் செயலிழந்தது. பின்னர் சுமார்  20 நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் சிசிடிவி கேமராக்கள் வழக்கம் போல் செயல்பட தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்திருக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் சிசிடிவி காட்சிகள் திடீரென செயலிழந்தது அரசியல் கட்சியினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நீலகிரியில் திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக கூட்டணி சார்பில் லோகேஷ் தமிழ்ச்செல்வனும், பாஜக கூட்டணியில் எல்.முருகனும், நாம் தமிழர் கட்சி சார்பாக ஜெயக்குமாரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Next Story

'பாஜகவின் செயலை மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து 

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 'Our people are watching the work of the BJP' - Chief Minister M. K. Stalin's opinion

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இந்நிலையில் 'நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது' என பாஜக அரசு தமிழகத்தை வஞ்சிப்பதாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் 'மிக்ஜாம் புயல் மற்றும் வெள்ளப் பாதிப்புகளுக்கான நிவாரணமாகத் தமிழ்நாடு கோரியது 37,907 கோடி ரூபாய். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணமாகவும், உட்கட்டமைப்புகளை மறுசீரமைக்கவும் தமிழ்நாடு அரசு மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து இதுவரை செலவு செய்துள்ளது 2,477 கோடி ரூபாய்.

ஆனால், ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது அறிவித்திருப்பதோ வெறும் 276 கோடி ரூபாய். இதுவும் நாம் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது என வஞ்சிக்கும் ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு செயலையும் நம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள்!' எனத் தெரிவித்துள்ளார்.