Skip to main content

கமலின் ‘மய்யம்', ‘நாளை நமதே’ என மாற்றம்!

Published on 11/02/2018 | Edited on 12/02/2018
kamal

 நடிகர் கமல்ஹாசன் கடந்த ஆண்டு இறுதியில் மய்யம் என்ற பெயரில் மொபைல் செயலி மற்றும் இணையதளத்தை அவர் தொடங்கினார். தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், தமிழகத்தில் உள்ள பிரச்சனைகளை அறிந்து கொள்ளும் விதமாகவும் அந்த இணையதளம் இருந்தது.

 

 தற்போது மய்யம் என்ற பெயரில் இருந்த இணையதளம் நாளை நமதே என பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. www.naalainamadhe.maiam.com  என்ற புதிய இணையதளத்தில் கல்வி, தொழில், சுற்றுச்சூழல், வேளாண்மை, நீர் மேலாண்மை, நிதி உள்ளிட்ட துறைகளில் கருத்துகள், மேம்பாட்டு திட்டங்கள் ஆகியவற்றை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சார்ந்த செய்திகள்

Next Story

நாங்கள் தொடங்கியபின் பிற கட்சிகள் கரையும்! - கமல் நற்பணி மன்ற மாவட்டத் தலைவர் கோமகன்  

Published on 20/02/2018 | Edited on 21/02/2018

தமிழகத்தில் நிலவிவரும் பரபரப்பான அரசியல் சூழலில் நடிகர் கமல்ஹாசன்  நாளை(பிப்ரவரி 21-ஆம் தேதி) தன் கட்சி பெயர், கொடி மற்றும்  கொள்கைகளை வெளியிட்டு தன் அரசியல் பயணத்தை இராமேஸ்வரத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்கள் வீட்டிலிருந்து தொடங்குவதாக கூறியிருக்கிறார். கமல் ரசிகர்கள், ஆதரவாளர்கள் கட்சிக்கு வலுசேர்க்க  தீயாக  செயல்பட்டு வருகின்றனர். கமல் நற்பணி மன்றத்தின் மத்திய சென்னை மாவட்ட தலைவர் கோமகனிடம் பேசினோம்.  

 

Kamal Manram Cadre Komagan

சுற்றுப்பயணத்திற்கான ஏற்பாடுகள், எதிர்பார்ப்புகள் எந்த அளவில் உள்ளது?
ரொம்பவே உற்சாகமாக உள்ளோம். மத்திய சென்னை சார்பாக  மட்டும் பதினைந்து கார்கள், ஐந்து டெம்போ ட்ராவலர்கள் ஏற்பாடு செய்துள்ளோம்.

ரஜினி, கமல் சந்திப்பினால் ஒருபலனும் இல்லையென அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறாரே... அது பற்றி?
யார் எது வேண்டுமானாலும் சொல்லட்டுமே, கமல் ஆட்சி ஊழலற்ற ஆட்சியாக இருக்கும் என ரஜினியே சொல்லியிருக்கிறார். மிகச்சிறந்த சிந்தனையாளர், முற்போக்கு எண்ணங்கள் கொண்டவர் எங்கள் தலைவர். ஓட்டுக்கு காசு கொடுக்கும் கூட்டம் அல்ல. குவாட்டருக்கும் பிரியாணிக்காகவும் நாங்கள் போகவில்லை. உண்மையான தலைவனின் தொண்டனாக போகவிருக்கிறோம். இதற்காக  இதுவரை எங்களுடைய சொந்த பணத்தையே செலவு செய்திருக்கிறோம். எப்படியும் குறைந்தபட்சம் மூன்று லட்சம் பேர் கூடவிருக்கிறோம்.

அப்துல் கலாம் வீட்டிலிருந்து பயணத்தைத் தொடங்ககூடாது என பாஜக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியிருக்கிறாரே?
மதங்களுக்கும் கட்சிகளுக்கும் அப்பாற்பட்ட தலைவர்  கலாம் அய்யா அவர்கள். எனவே யார் வேண்டுமானாலும் அங்கே செல்லலாம். இன்னார் போகவேண்டும், போகக்கூடாது என்றில்லை, அதை சொல்ல தகுதியுமில்லை உரிமையுமில்லை. இதே கருத்தை அப்துல் கலாம் வீட்டில் உள்ளோர் சொல்லியிருந்தால் ஏற்கத்தக்கது. ஏனெனில் அவர்களுக்கு அந்த உரிமையுள்ளது, அவர்களும் எங்கள் வருகையை ஏற்றுக்கொண்டுவிட்டனர். எனவே அய்யா கலாம் வீட்டிலிருந்து தொடங்குவதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

 

Komagan Kamal manram

நடிகர்கள் அரசியலில் ஜெயிக்கக்கூடாது என்று நடிகர் சத்யராஜ் கூறியுள்ளாரே?
எங்களை பொருத்தவரை MGR தான் மக்கள் மனங்களில் இடம்பிடித்தவர். மக்களை ஏமாற்றாமல் மக்கள் நலம் கருதி உழைத்தவர். அவருக்கு பிறகு அதிகப்படியான மக்களின் வரவேற்பை பெற்றவர் எங்கள் தலைவர். தன்னுடைய சொந்த வருமானத்திற்கான வருமான வரியை நேர்மையாக கட்டும் தலைவர் அவர். அப்படியிருக்க மக்கள் விஷயத்தில் அவர் கடைபிடிக்கப் போகும் நேர்மையை பார்க்கத்தான் போகிறீர்கள். விரைவில், சாதாரணமக்கள் கூட எங்கள் கட்சியில் சேர உறுப்பினர் படிவம் உள்ளதா என விசாரித்த வண்ணம் உள்ளனர். சத்யராஜ் இன்றைய காலகட்டத்தில் மார்க்கெட் இல்லாத நடிகர். அவர் பேசியதை சில நேரங்களில் அவரே பின்வாங்கக்கூடிய நடிகர். எனவே அவர் கருத்து எங்களை பாதிக்காது.

ரஜினி கமல் ஒன்று சேர்ந்தாலும் 10% வாக்குகளைக்கூட பெறமுடியாது என்று மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். அதுபற்றி உங்கள் கருத்து?
பொறுத்திருந்து பார்த்தால் மக்கள் மூலமாகவே அறிவார்கள். 10% வாக்குகள் கூட வாங்க முடியாது என்று சொல்லியிருந்தாலும் அவர்களே இதுவரை ஜெயிக்கவில்லையே... அது ஏன் என்று சொல்லமுடியுமா அவர்களால்? தற்போது மக்கள் மாற்றத்தையே விரும்புகிறார்கள். அந்த மாற்றம் தலைவர் ஆட்சியிலேயே நடக்கும் என நினைக்கிறார்கள். எங்கள் கட்சியில் சேர்வதற்கான அடிப்படை உறுப்பினர் படிவம்கூட இன்னும் தயாராகவில்லை. ஆனாலும்  தினமும் மக்களிடமிருந்தும்  பிற கட்சிகளில் இருந்தும் கூட உறுப்பினர்களாகச் சேர தொலைபேசி அழைப்புகள் வருகின்றன. சேர்க்கை தொடங்கிவிட்டால் பிற கட்சிகள் கரையும்.  கண்டிப்பாக மாற்றம் ஏற்படும். மதுரையில், கட்சி கொடி பெயர் அறிவிக்கவுள்ளார். அதற்கு பலம் சேர்க்க எல்லா வகையிலும் தயாராக உள்ளோம். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் செயலாற்றி வருகிறோம். இன்னும் தலைவரை முதல்வர் பதவியில் அமரவைக்க உயிரைக்கூட கொடுப்போம். 

Next Story

கமல் மக்களை சந்தித்த தருணங்கள்! - ஒரு ரீவைண்ட்

Published on 20/02/2018 | Edited on 21/02/2018

கமல்ஹாசன் தனது அரசியல் பயணத்தை முன்பே தொடங்கிவிட்டாலும், தனது கட்சி பயணத்தை இன்று (21-02-2018) முதல் தொடங்குகிறார். திரையுலகில் உலகநாயகனாக இருக்கும் கமல் அரசியலில் எப்படி இருப்பார் என பலதரப்பட்ட மக்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

kamalhassan

 
கமல்ஹாசனின் குடும்பத்திற்கு ஆரம்பத்திலிருந்தே  அரசியல் தொடர்புகள்  உண்டு. ராஜாஜி, காமராஜர் கால தலைவர்கள் பலர் கமலின் தந்தையுடன் நட்பு கொண்டிருந்தனர். கமலின் அண்ணண் சாருஹாசன் தி.மு.கவிற்கு நெருக்கமான வழக்கறிஞராக இருந்து வந்தார். எம்.ஜி.ஆருடனும் கலைஞருடனும் ஆரம்பத்திலிருந்தே நட்பாக இருந்தவர் கமல். இப்படி அரசியல் தொடர்புகள் அவருக்கு ஆரம்பத்திலிருந்தே உண்டு.  அதைத் தாண்டி மக்களை நேரடியாக சந்தித்த தருணங்கள் பல. ஒரு இளைஞனாக இந்தித் திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டங்களில் தீவிரமாகக் கலந்து கொண்டதை அடிக்கடி நினைவு கூர்ந்திருக்கிறார் கமல்.    

தனது ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி அதன் மூலம் இரத்த தானம், உடல்தானம், சமூக நலம், போன்ற பொது காரியங்களில் ஈடுபட வைத்தார். இதில்  முதல் ஆளாக தானே உடல் தானம் செய்தும் காட்டினார். இப்படி பொதுவாழ்வில் அவரது தொடர்பு அவ்வப்போது இருந்தே வந்திருக்கிறது. மக்களை நேரடியாக சந்தித்த தருணங்கள் இருந்திருக்கின்றன. இதற்கெல்லாம் பிறகு இப்பொழுது அரசியலில் நேரடியாக இறங்கிவிட்டார்.
 

பாபர் மசூதி இடிப்பிற்கு எதிர்ப்பு

babri masjid

 

1992இல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பொழுது, அன்றைய பிரதமர் நரசிம்ம ராவை சந்தித்து மத நல்லிணக்கம் சிதைவதைப் பற்றிய தன் கவலையைத் தெரிவித்து நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை வைத்தார். அதைத் தொடர்ந்து பாபர் மசூதி இடிப்புக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து செயல்பட்டார்.
 

காவேரி நதிநீர் பங்கீடு பிரச்சனை

இன்றுவரை முழுமையாக முடியாத பிரச்சனை காவேரி நதிநீர் பங்கீட்டு பிரச்சனை. இதற்கு அனைத்து நேரங்களிலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் கமல்ஹாசன் குரல் கொடுத்துள்ளார்.

kamalhassan

 

ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு ஆதரவாகவும், மாட்டுக்கறிக்கான தடை உத்தரவை எதிர்த்தும் குரல் கொடுத்ததில் முதலாக இருந்தார்.
 

விருமாண்டி படத்தின்போது முதலில் புதிய தமிழகம் கட்சி தலைவர்  கிருஷ்ணசாமி 'சண்டியர்' என்ற பெயருக்கு எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அவர் படத்தின் பெயரை 'விருமாண்டி' என மாற்றினார். அதைத்தொடர்ந்து ஏற்பட்ட சில பிரச்சனைகளின் காரணமாக படப்பிடிப்பு தளத்திற்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமென அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கேட்டார். ஆனால் ஜெயலலிதா மறுத்துவிட்டார். பின்னர் சென்னை கேம்பகோலா மைதானத்தில் படப்பிடிப்பை நடத்தினார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து தனது செல்வாக்கை நிரூபிக்க விரும்பிய கமல், விருமாண்டி படத்தின் இசை வெளியீட்டு விழாவை மதுரையில் பொதுக்கூட்டம் போல நடத்தினார். 

 

kamalhassan

அதன் பின் கமல்ஹாசன் படம் என்றாலே பிரச்சனை இல்லாமல் வாராது என்பது அனைவரின் மனதிலும் பதிந்துபோனது. விஸ்வரூபம் படத்தின்போது ஏற்பட்ட பிரச்சனைகளில்  அது உச்சத்தை தொட்டது. அடுத்தடுத்து நிறைய பிரச்சனைகள் சூழ்ந்துகொண்டிருக்க, இதனால் வெறுத்துப்போன கமல் தான் "நாட்டைவிட்டு வெளியேறுவதைத் தவிர வேறு வழியில்லை" என கூறினார். அப்போதும் அவருக்கு மக்களின் ஆதரவு இருந்தது. அப்பொழுதும் திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கொடுத்து காவல்துறை ஆற்றலை வீணடிக்க முடியாது என்று கூறினார் ஜெயலலிதா. கமலின் வாழ்க்கையில் எது மாறினாலும் கடைசிவரை கமலுக்கும், ஜெயலலிதாவிற்குமான பிரச்சனை ஓயவே இல்லை. புகழ்பெற்ற வளர்ப்புமகன் திருமணத்தின் பொழுது கூட, திருமண விழாவுக்கு சென்ற கமல், மணப்பெண்ணின் தாதாவான சிவாஜி கணேசனை சந்தித்துவிட்டு ஜெயலலிதாவை சந்திக்காமலேயே வந்தார். இப்படி, அவருக்கும் ஜெயலலிதாவுக்குமான உறவு ஜெயலலிதா மரணத்தின் பொழுது "சார்ந்தோர்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்" தெரிவிக்கும் அளவுக்குதான் இருந்தது.    
 

அரசியல் ஆர்வம் தொடர்பான முதல் அறிவிப்புக்கும் கட்சி தொடங்குவதற்குமான இடைவேளை மிகக் குறைவே. அவரின் சினிமா போட்டியாளரான ரஜினிகாந்த் எடுத்துக்கொண்ட அவகாசம் மிக அதிகம். சிலரால் அவசர கோலம் என விமர்சிக்கப் படுகிறது கமலின் அரசியல் கோலம். சொல்லப் போனால் முதல் புள்ளியை இப்பொழுது வைத்திருக்கிறார், கோலத்தை பொறுத்திருந்து காண்போம்.