Skip to main content

கட்சிக்காக கமல் வாங்க போகும் பிரபல செய்தி சேனல்? அரசியல் கட்சியினர் அதிர்ச்சி!

Published on 02/08/2019 | Edited on 02/08/2019

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கமலின் மக்கள் நீதி மய்யம் 4 சதவிகித வாக்குகளை பெற்றது. குறிப்பாக பொள்ளாச்சி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் ஒரு இலட்சத்துக்கும் மேல் வாக்கு பெற்று இந்த தொகுதிகளில் மூன்றாம் இடம் பிடித்தது. நகர் புற மக்களிடையே கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளதை நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலின் மூலம் அறியப்பட்டது. மேலும் புது வாக்காளர்களிடையே கமல் கட்சிக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. இருந்தாலும் கமலின் கட்சி கிராம மக்களிடையே அதிகமாக சென்றடையவில்லை என்ற பேச்சும் அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் எழுந்தது. இந்த நிலையில் வரும் சட்டமன்றம் மற்றும் உள்ளாட்சி தேர்தலில் மக்கள் நீதி மய்ய கட்சியை அனைத்து தரப்பு மக்களிடையே கொண்டு செல்ல கமல் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருவதாக  அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். 
 

kamal



இதனால் பிரபல அரசியல் நிபுணர் பிரசாந்த் கிஷோரிடம் ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது. மேலும் அனைத்து கட்சிகளுக்கும் தனியாக தொலைக்காட்சி இருப்பது போல் கமலின் மக்கள் நீதி மய்யத்திற்கும் தனியாக ஒரு செய்தி சேனலை ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒரு பிரபல தனியார் தொலைக்காட்சியிடம் பேச்சு வார்த்தை நடத்துவதாக தெரிவிக்கின்றனர். இது பற்றி விசாரித்த போது, குறுகிய காலத்தில் கிராம மக்களை சென்றடையவும், கட்சியை வளர்க்கவும் ஒரு செய்தி சேனலை ஆரம்பிக்க நடிகர் கமல் திட்டமிட்டுள்ளார். அதற்காக ஒரு பிரபல செய்தி சேனலை வாங்க கமல் உள்ளதாகவும் சொல்கின்றனர். ஆனால் கமல் தரப்பில் இருந்து இன்னும் இது குறித்து அதிகாரபூர்வ தகவல் வரவில்லை. வெகுவிரைவில் கமல் அறிவிப்பார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.       

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்டத் தேர்தல் வாக்கு சதவீதம்; வெளியான விவரம்!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Details released on Second Phase Election Vote Percentage

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 88 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அந்த வகையில் கேரளாவில் 20, கர்நாடகாவில் 14, ராஜஸ்தானில் 13, மத்தியப் பிரதேசத்தில் 6, மகாராஷ்டிராவில் 8, உத்தரப் பிரதேசத்தில் 8, அசாமில் 5, பீகாரில் 5, சத்தீஸ்கரில் 3, மேற்கு வங்கத்தில் 3, ஜம்மு காஷ்மீர் மற்றும் திரிபுராவில் தலா 1 தொகுதிகள் என மொத்தம் 88 தொகுதிகள் தேர்தல் நடைபெற்றது. 

இதில், இரண்டாம் கட்டத் தேர்தலில் 60.69% வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக, திரிபுரா மாநிலத்தில் அதிகபட்சமாக  79.66% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், குறைந்தபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54.85 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேலும், மணிப்பூர் 78.78%, சத்தீஸ்கர் 75.16%, மேற்கு வங்கம் 73.78%, அசாம் 77.35%, ஜம்மு காஷ்மீர் 72.32%, கேரளா 70.21%, கர்நாடகா 68.47%, ராஜஸ்தான் 64.07%, மத்தியப் பிரதேசம் 58.26%, மகாராஷ்டிரா 59.63%, பீகார் 57.81% வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

இரண்டாம் கட்டத் தேர்தல் நேற்று (26-04-24) முடிவடைந்த நிலையில், மூன்றாம் கட்டத் தேர்தல் வரும் மே 7ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் 12 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் என மொத்தம் 94 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.