Published on 25/03/2019 | Edited on 25/03/2019

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரான நடிகர் கமல்ஹாசன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாயளர்களை சந்தித்தார்.
அப்போது, நயன்தாரா பற்றி ராதாரவி பேசியது சர்ச்சையாகி இருக்கிறதே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், நயன்தாராவை மரியாதையாக நடத்த வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. ராதாரவி ஒரு கலைஞராக இருந்துகொண்டு அப்படி பேசியது வருத்தம் அளிக்கிறது. அவரை கட்சியில் இருந்து நீக்கியதற்கு தி.மு.க.வுக்கு பாராட்டுகள் என்றார்.