Skip to main content

இஸ்ரேல் செல்வதற்கு முன்பு டெல்டா பக்கம் நடைபயணம் போங்க... முதல்வருக்கு விவசாயிகள் அட்வைஸ்

Published on 12/09/2019 | Edited on 12/09/2019

 

முதலமைச்சர் நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேல் செல்வதற்கு முன்பு டெல்டா மாவட்டங்களுக்கு நடைபயணம் செல்லுங்கள் என்று காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்கம் மகாதானபுரம் ராஜாராம் தெரிவித்துள்ளார்.

 

71111


 

இதுகுறித்து காவிரி நீர் பாசன விவசாயிகள் நல சங்க தலைவர் மகாதானபுரம் ராஜாராம் விடுத்துள்ள அறிக்கையில், 
 

நீர் சிக்கனம் பற்றி அறிய இஸ்ரேலுக்கு செல்ல உள்ளதாகவும் தனது மேல்நாட்டு பயணம் தொடரும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். நாம் ஒரு ஏக்கருக்கு பயன்படுத்தும் தண்ணீரை ஏழு ஏக்கருக்கு பயன்படுத்தும் நவீன தொழில்நுட்பத்தை இஸ்ரேல் புகுத்தியுள்ளது. கழிவுநீரை மறுசுழற்சி செய்து விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இதுகுறித்து அறியவே செல்ல திட்டமிட்டிருக்கிறோம் என்கிறார் முதல்வர்.

 

eps


 

இஸ்ரேல் நிலையமைப்பு பருவநிலை மழை அளவு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்றதல்ல. தமிழகத்தில் பருவநிலை, நீர்நிலைகள், ஆறுகள், பயிர் வகைகள் முற்றிலும் உலகத்தையே மலைக்க வைக்கக் கூடியவை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகவே முப்போகம் பாசனம் பெற்று சோழ வளநாடு சோறுடைத்து என்று பெயர் பெற்றது காவேரி.
 

காவிரி நீரை தேக்கி சிறு ஆறுகளுக்கு பிரித்து கல்லணையை கட்டி உலகுக்கு வழிகாட்டப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களுக்கு முன்பு தமிழகத்தை ஆண்ட பல மொழி அரசர்கள் உபரிநீரை தேக்கவும், மழை இல்லாத காலங்களில் பாசனம் தொடரவும் ஏரி குளம் அமைத்ததால் விவசாயம் செழித்தது.
 

ஆனால் இன்றோ வாய்க்கால்கள் கிளை வாய்க்கால்கள் யாவும் அதன் தலைப்பிலேயே ஆக்கிரமிப்புகளால் சிக்கித் தவிக்கிறது. இதனால்தான் சென்ற ஆண்டும், இந்த ஆண்டும் காவிரி நீர் அதிகமாக வந்தும் முக்கொம்புலே கொள்ளிடத்திலே அதை திருப்பி கடலுக்கு விடுகிறோம். ஆனால் இங்கும் கடைமடைக்கு நீர் செல்லவில்லை.


 

 

திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, நாகை, திருவாரூர் மாவட்டங்களில் 3573 குளங்கள் ஏரிகள் நீர் செல்லவில்லை. காவிரி நீர் வருவதற்கு முன்பு பெட்டவாய்த்தலை அருகே உய்யகொண்டான்வாய்க்கால், அனலை, கோப்பு, எட்டரை, சோம்பரசம்பேட்டை, புத்தூர், ஆறுகள், குழுமிக்கரை, திருவரம்பூர், காட்டூர், வல்லம் வரை காவிரி நீர் செல்ல வரவில்லை.
 

அதைப்போல் புலிவலம் பகுதியில் காவிரி நீர் பிரிந்து கொடிக்கால் வாய்க்கால் வழியே குழுமணி பேரூர், மருதண்டகுறிசி வழியே குடமுருட்டி சென்று காவிரியில் கலக்கும் ஆனால் நீர் செல்லவில்லை.
 

கல்லணையிலிருந்து கொள்ளிடம் காவிரி வெண்ணாறு கல்லணைக் கால்வாய் வழியாக காவிரி நீர் சோழநாட்டை வளமடைய செய்யும். ஆனால் கடைமடை வரை காவிரி நீர் செல்லவில்லை. முக்கொம்பில் உபரிநீர் நீர் சென்று கொள்ளிடம் வழியாக கடலுக்கு செல்கிறது.
 

தஞ்சாவூரில் 724 ஏரி குளங்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் 168 ஏரி குளங்கள் என்று திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, நாகையில் மட்டும் 8753 குழந்தைகள் ஏரிகள் காவிரி நீர் செல்ல வில்லை ஆனால் உபரி நீரை கொள்ளிடத்திலிரந்து சுலபமாக திறந்ர் விடுகிறோம்.
 

முதலில் கட்டளை காவேரி கதவணைக்கு வரும் நீர் புதிய கட்டளை மேட்டு வாய்க்கால் மூலம் திருச்சி தஞ்சை புதுக்கோட்டை குளங்கள் நிரம்ப வேண்டும் . உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் ஏரிகள் நிரப்பப்பட வேண்டும்.
 

அதன்பிறகு கல்லறைக்கு சென்று கடைமடை வரை தாராளமாக செல்ல வேண்டும். எட்டு வழி சாலை போல் வாய்க்கால்களில் தலையிலிருந்து அகலப்படுத்தி உள் கொள்ளவை அதிகப்படுத்தி அனைத்து ஏரிகளுக்கு நீர் செல்ல வழி செய்தால் முகப்பில் இருந்து உபரி நீரை கொள்ளிடத்திற்கு விடாமல் நீரை சேமிக்க முடியும்.
 

முன்னாள் முதல்வர் காமராஜ் விவசாயிகளை சந்திக்கும் போது அவர்கள் கூறும் கருத்துகளை சரி என்று பட்டாலும் பயனுள்ளதாக இருந்தாலும் உடனே அதை செயல் படுத்த உத்தரவிடுவார் அரசு ஆணை பின்னர் வரும் முதலில் அதனை செயல்படுத்துங்கள் என்பார்.
 

சுதந்திரத்திற்குப் பிறகு கீழ் பவானித்திட்டம் கிருஷ்ணகிரி சாத்தனூர் ஆகிய ஊர்களில் பாயும் தென்பெண்ணை திட்டம், வைகை ஆற்றின் குறுக்கே வைகை அணை பெரியகுளத்தில் இருந்து பாலாற்றில் நீர் காவேரிப்பாக்கம், மகேந்திரமங்கலம் மாமண்டூர் ஏரிகளுக்கு நீர் செல்லும் வரை வாய்க்கால்கள், பாசனத்தில் கீழணை, மேலணை காட்பாடியில் சேயாற்றின் குறுக்கே ஒரு அணை புதுக்கட்டளை வாய்க்காலில் புள்ளம்பாடி வாய்க்காலில் என்று வாய்க்கால் தலைப்பில் ஏரிக்கரை நின்றுகொண்டு காமராஜர் அளித்த சிறிய பெரிய அணைகள் பலப்பல .


 

 

அதேபோல் கட்டளை கட்டளை முதல் கல்லணை வழியாக டெல்டா மாவட்டங்களுக்கு சென்று வாய்க்கால்கள் ஏரிகள் சீர்செய்ய அரசிடம் உள்ள கருத்துக்களை காமராஜர் போல வாய்க்கால் தலைப்பிலேயே ஏறி கரையிலேயே அரசு ஆணை இட்டால் ஒரு சொட்டு நீர் முக்கொம்பில் கொள்ளிடத்திற்கு திறந்துவிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
 

முதல்வர் இஸ்ரேல் செல்லும் முன் காவிரி பாசன பகுதிகளில் 10 நாள் நடைபயணம் சென்றால் நீர் மேலாண்மை 10 நாளிலேயே 100% வெற்றி பெறும் தமிழகத்தில் காவிரி ஜீவநதியாக மாறி டெல்டா மாவட்ட மக்களுக்கு செழிக்கும் என கூறியுள்ளார். 
 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.