Skip to main content

அப்பா திமுக பொறுப்பாளர்... மகன் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு!

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

Father DMK Election Working Committee Secretary, son supports AIADMK candidate

 

வேலூர் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்பாளராக மாநகர மா.செ. அப்பு போட்டியிடுகிறார். திமுக சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ கார்த்தி போட்டியிடுகிறார். இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், தத்தமது சமுதாயப் பிரமுகர்கள், மாநகரின் முக்கியப் பிரமுகர்களைச் சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.

 

இந்நிலையில், மார்ச் 18ஆம் தேதி வேலூர் மாநகரம் தியாகராஜபுரத்தில் உள்ள அருண் மருத்துவமனைக்குச் சென்ற அதிமுக வேட்பாளர் அப்பு, மருத்துவர் அருணை சந்தித்து அவருக்கு சால்வை அணிவித்து தனக்கு ஆதரவாக ஓட்டுக்கேட்டார். இது திமுக வட்டாரத்தைக் கொதிப்படையச் செய்துள்ளது. இதுகுறித்து நம்மிடம் பேசிய திமுக நிர்வாகிகள் சிலர், "இந்தத் தொகுதியை எதிர்பார்த்து கட்சிக்கு வந்தவர் அதிமுக அமைச்சரவையில் இடம்பெற்ற முன்னாள் அமைச்சர் டாக்டர் விஜய். இவர், சில மாதங்களுக்கு முன்பு திமுகவில் இணைந்தார். அவருக்கு இந்த தொகுதியை ஒதுக்கவில்லை. ஆனால், திமுகவில் மாநிலத் தேர்தல் பணிக்குழுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். அவரது மகன் தான் டாக்டர் அருண். அவரை சந்தித்து தான் அதிமுக வேட்பாளர் சால்வை அணிவித்து ஆதரவு கேட்டுவிட்டு வந்துள்ளார். அருண், அதிமுக வேட்பாளருக்கு ஆதரவு தருவதில் எங்களுக்கு எந்தப் பிரச்சனையுமில்லை. அப்பா மகன் இருவரும் ஒரே வீட்டில் தான் உள்ளனர். தனது தந்தை திமுகவில் பொறுப்பில் உள்ளார் என்பதும் அவருக்குத் தெரியும். அதிமுக வேட்பாளரும் அருணை சந்திப்பதற்கு முன், ‘நான் உங்களை வந்து சந்திக்கட்டுமா எனக் கேட்டுக்கொண்டே’ அங்கு சென்றிருப்பார். மகன் எதிர் வேட்பாளருக்கு ஆதரவு தருவது என்பது எப்படிச் சரியாகும்" என ஆதங்கப்படுகின்றனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

லாரி ஏறியதால் பெண் தலைமை காவலர் பரிதாபமாக உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Female head constable passed away in lorry collision

வேலூர் மாவட்டம் அகரம் பகுதியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மனைவி பரிமளா (42) இவர் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் ஏப்ரல் 17 ஆம் தேதி தேர்தல் பணிக்காக திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படையில் நடைபெற்ற கலந்தாய்வில் கலந்து கொண்டு மாலை வீட்டுக்கு புறப்பட்டார்.

திருப்பத்தூரில் இருந்து மாதனூர் வரை பேருந்தில் சென்றுள்ளார். மாதனூரில் இருந்து தனது கணவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது, மாதனூர்- ஒடுகத்தூர் சாலையில் தாகூர் பள்ளி அருகில் ஆட்டோ ஒன்று குறுக்கே வந்ததால் சட்டென்று பிரேக் அடித்துள்ளார். அப்போது பின்னால் உட்கார்ந்து இருந்த பெண் தலைமை காவலர் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒடுகத்தூரில் இருந்து மாதனூர் நோக்கி வந்த லாரி தலைமை காவலர் பரிமளா மீது ஏறி இறங்கியதில் தலை நசுங்கிய நிலையில்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் கிராமிய காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பிரேதத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். படுகாயமடைந்த பெண் தலைமை காவலரின் கணவர் தட்சிணாமூர்த்தி மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்து ஓட்டுநரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் பழுதான லோடு ஆட்டோவை சாலையோரம் நிறுத்தி விபத்து ஏற்பட காரணமாக இருந்த ஒர்க் ஷாப் உரிமையாளரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் அரசு மருத்துவமனையில் விபத்து குறித்து நேரில் விசாரணை மேற்கொண்டு உயிரிழந்த தலைமை காவலர் பரிமளாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இது காவல்துறையினர் மற்றும் அப்பகுதி மக்கள்  மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Next Story

கடும் வெயிலில் போக்குவரத்தை சரி செய்யும் முதியவர்!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
 old man fixing the traffic in the hot sun

சமீபகாலமாக வேலூரில் நூறு டிகிரியை தாண்டிய வெயில் 106.4 டிகிரி வரை வெயில் பொதுமக்களை வாட்டி வரும் நிலையில், வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே சில்க் மில் பேருந்து நிலையத்தில் நான்கு முனை சந்திப்பு சாலையில் வாகனங்கள் கரடுமுரடாக சென்று கொண்டிருந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுபோன்ற சிக்னல்களில் மதிய நேரத்தில் வெய்யிலின் தாக்கத்தால் போக்குவரத்து காவலர்கள் பணி செய்வதில்லை. சுடும் வெயிலில் நிற்க முடியாமல் வாகன ஓட்டிகளும் போக்குவரத்து விதிகளை மீறி வேகமாக செல்கின்றனர். இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதனைப் பார்த்த அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், சாலையின் மையத்துக்கு சென்று ஒவ்வொரு புறத்தில் இருந்து வரும் வாகனங்களை நிறுத்தி போக்குவரத்து காவலரைப்போல் வழியனுப்பும் காட்சி அனைவரையும் ஆச்சர்யப்பட வைத்தது. வாகன ஓட்டிகளும் போக்குவரத்தை சரி செய்ய முயலும் முதியவருக்கு மரியாதை கொடுத்து வாகனங்களை நிறுத்தி, அதன் பிறகு சென்றனர். இதனால் சிலமணி நேரம் போக்குவரத்து நெரிசல் இல்லாத நிலை ஏற்பட்டது.