Skip to main content

திமுக முன்னாள் அமைச்சர் பா.ம.க.வில் இணைகிறாரா ?

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

தருமபுரி மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் அன்புமணி நேற்றைய தினம் திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தனை சந்தித்தார் . இந்த சந்திப்பின் பின்னணி என்னவென்று விசாரித்த போது சமீப காலமாக முல்லைவேந்தன் திமுக தலைமை மீது அதிருப்தியில் உள்ளதால் தருமபுரி மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யமால் ஒதுங்கியிருந்தார் . 

 

mullaivendan



இதற்கிடையில் நேற்றைய தினம் அன்புமணி அவரை சந்தித்து ஆதரவுக் கேட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பாகப் பார்க்கப்படுகிறது.  இவர்  முன்பு முதலமைச்சர் எடப்பாடியை சந்தித்து ஒரு சில திட்டத்துக்கான கோரிக்கை மனு அளித்தது குறிப்படத்தக்கது . இது குறித்து அந்த தொகுதி மக்களிடம் கேட்டபோது அவர் திமுக கூட்டணியில் உள்ள உட்கட்சி பூசலால் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இருப்பார் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது . 
 

சார்ந்த செய்திகள்