Skip to main content

ஒரே ஊரைச் சேர்ந்த வேட்பாளர்கள்; திமுக, அதிமுக நேரடி ஃபைட்...!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
 Direct competition between DMK and AIADMK in Erode Parliamentary Constituency
ஆற்றல் அசோக்குமார் - கே.இ.பிரகாஷ்

திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கேயம். நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு மற்றும் மொடக்குறிச்சி என மூன்று மாவட்டங்களை உள்ளடக்கிய 6 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது ஈரோடு பாராளுமன்ற தொகுதி. விவசாயம் மற்றும் நெசவு சார்ந்த ஜவுளி தொழிலே இங்கு பிரதானம்.

திமுக சார்பில் கே.இ.பிரகாஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு சிவகிரி அருகே உள்ள கானியம்பாளையம் என்ற சிறிய கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ், அடிப்படையில் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர். தொடக்கம் முதலே திமுக இளைஞர் அணியில் ஒன்றிய மற்றும் மாவட்ட அமைப்பாளராகவும் தற்போது மாநில துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.

திமுகவில் இளைஞர் அணிக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற உதயநிதி ஸ்டாலினின் கோரிக்கை அடிப்படையில் ஈரோடு பிரகாசுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தொகுதி முழுக்க திமுகவினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மத்தியில் வேட்பாளர் பிரகாசுக்கு நன்கு அறிமுகம் உள்ளது. எளிமையான அணுகுமுறையும், நிர்வாகத் திறமையும் கொண்டவர் என்பதால், தேர்தல் களத்தில் பிரகாஷின் செயல்பாடுகள் சுறுசுறுப்பாக இருக்கும் என்கிறார்கள் திமுகவினர்.

அதிமுகவில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவர் ஆற்றல் அசோக்குமார். இவரும் சிவகிரி அருகே உள்ள கொடுமுடி புதுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். முன்பு ஈரோட்டை உள்ளடக்கிய திருச்செங்கோடு தொகுதியின் அதிமுகவின் முன்னாள் எம்பி ஆக இருந்த சவுந்திரம் தான் இவரது தாயார். அதேபோல் மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதியின் பாஜக எம்எல்ஏவான டாக்டர் சரஸ்வதியின் மருமகன் இவர். பாஜகவில் இருந்த அசோக்குமார் சென்ற சட்டமன்றத் தேர்தலில் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டார் அப்போது இவரது மாமியார் டாக்டர் சரஸ்வதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதால் அதன்பிறகு எம்பி கனவில் ஈரோடு தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பத்து ரூபாய்க்கு சாப்பாடு, இலவசமாக கோயில் கட்டிடப் பணிகளை செய்து கொடுப்பது என பல்வேறு மக்கள் நலப் பணிகளை செய்து தொகுதி முழுக்க தன்னை தானே அறிமுகம் செய்து வந்தார்.

பாஜகவுடன் அதிமுக கூட்டணி இல்லை என எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தவுடன் நேராக எடப்பாடியை சந்தித்து அதிமுகவில் இணைந்தார் அசோக்குமார்,. அப்போதே ஈரோடு தொகுதி உனக்கு தான் என எடப்பாடி உறுதி கொடுத்திருந்தாக கூறப்படுகிறது. ஏற்கெனவே இந்த தொகுதி முழுக்க பல கோடி ரூபாய் வாரி இறைத்து தன்னை அறிமுகம் செய்து வைத்திருக்கிறாராம் அசோக்குமார். மேலும் 100 கோடி வரை செலவு செய்வேன் என தாராளம் காட்டி வருகிறாராம்

அசோக்குமார் அதிமுக வேட்பாளராக களம் இறக்கப்பட்டதால் அதிக மகிழ்ச்சி அடைந்திருப்பவர்கள் அதிமுகவை சேர்ந்த ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் தான். காரணம் இங்கே போட்டியிடுவதற்கு பெரும்பாலும் யாருக்குமே விருப்பமில்லை என்பதுதான். பாஜக கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸுக்கு இத்தொகுதி ஒதுக்கப்படவுள்ளது இதில் வேட்பாளராக போட்டியிட இளைஞரணி மாநில தலைவர் யுவராஜாவை அடுத்து முன்னாள் எம்எல்ஏ விடியல் சேகரை அக்கட்சியின் தலைவர் ஜிகே வாசன் கேட்டபோது, ஐயா ஆள விடுங்க... என ஓட்டம் பிடித்தார்களாம். அடுத்து வேறு வழியில்லாமல் செலவுக்கு பணம் கொடுத்து விடுவதாக உறுதி கூறப்பட்ட பிறகே அக்கட்சியின் ஈரோடு மாவட்ட தலைவர் விஜயகுமாரை வேட்பாளராக ஜிகே வாசன் சம்மதிக்க வைத்துள்ளார் என்று கூறப்படுகிறது

ஈரோடு தொகுதி போட்டிக்கான களம் என்பது திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள் மத்தியில் என்ற வகையில் களம் மாறியுள்ளது. திருச்செங்கோடு நாடாளுமன்றத் தொகுதியாக இருந்த போது பேராசிரியர் அன்பழகன் ஒரு முறை போட்டியிட்டுள்ளார். அதன் பிறகு  ஈரோடு தொகுதியாக தொகுதி மறுசீரமைப்பில் வந்த பிறகு திமுக இங்கு நேரடியாக களம் காணவில்லை, சென்ற முறை ம.தி.மு.க. கணேச மூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று வென்றார். தற்போது தான் திமுகவை  சேர்ந்தவர் நேரடியாக களம் காண்கிறார். இது உடன்பிறப்புகள் மத்தியில் உற்சாகத்தை கொடுத்துள்ளது..

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

முறைநீர் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Farmers who besieged the water association office were arrested

விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற விவசாயிகள் கைது செய்யப்பட்ட சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு பஸ் நிலையம் அருகே கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அந்த அலுவலகத்தை சேர்ந்த நிர்வாகிகள், நீர்வளத்துறையின் தவறான நீர் நிர்வாகத்திற்கு துணையாக இருந்தும், கீழ்பவானி கால்வாயில் ஐந்தாவது நனைப்பிற்கு தண்ணீர் இல்லாமல் போக காரணமாக இருந்தும், நீர் பாசனத்திற்கு நம்பகத் தன்மையை இழக்க செய்து போலியாக செயல்படும் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பை சேர்ந்த நிர்வாகிகளிடம் கீழ்பவானி பாசன உரிமை பெற்ற விவசாயிகள் முறையிடுவதாக அறிவித்திருந்தனர்.

இதையடுத்து கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பினர் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் எனவே இதை தடுத்து நிறுத்த வேண்டி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர். இதனால் கீழ்பவானி முறை நீர் விவசாயிகள் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு முறையிட வந்திருந்த விவசாயிகள் 14 பேரை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.