தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா? அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா? என திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னதாக நேற்று இரவு, காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் பகுதியில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய பின் மேடையில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இன்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிற ஒரே கட்சி அதிமுக தான். இன்று திமுக என்று சென்னால் ஒன்வே டிராபிக் தான். அங்கு எல்லாமே வீட்டுக்கு தான் போகும். ஆனால் அதிமுக மக்களுக்கு கொடுத்துக்கொண்டு இருக்கிறது. திமுகவில் பாக்கெட்டில் இருந்து எடுப்பார்கள், கொடுக்கமாட்டார்கள். கொடுக்கின்ற கட்சி அதிமுக என கூறியிருந்தார்.
இந்நிலையில், இன்று காலை சென்னை தண்டையார்பேட்டையில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
சுயமரியாதை திருமணத்தை கொண்டு வந்ததே திராவிட இயக்கம் தான். நான் முதல்வராக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறதோ, இல்லையோ தொண்டர்களுக்கு உள்ளது. காவிரி மேலாண்மை வாரிய விவகாரத்தில் நிதின் கட்கரியை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை.பிரதமர் சந்திக்க மறுத்தால் திமுக, அதிமுக எம்பிக்கள் ராஜினாமா செய்வார்கள் என கூறுமாறு சொன்னேன்.
காவிரி மேலாண்மை வாரியம் தொடர்பாக கட்காரியை சந்திப்பதால் எந்த பயனும் இல்லை. பிரதமர் சந்திக்க மறுத்தால், எம்பிக்கள் ராஜினாமா எனக்கூறுமாறு கூறினேன். கெட்டது செய்ய கர்நாடக அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டும் போது, நாம் ஏன் நல்லது செய்ய மீண்டும் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டக்கூடாது. ஆனால், இதனை ஏற்க முதல்வர் மறுத்துவிட்டார்.
எம்.எல்.ஏக்களுக்கு பணத்தை கொடுத்து ஆட்சியை காப்பாற்றுவது யார்? மாதா மாதம் படி அளப்பது யார்? தமிழக அரசின் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரசியல் பேசலாமா? அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதலமைச்சர் சொல்லலாமா? இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதிமுக கொடுக்கும், திமுக பிடுங்கும் என முதல்வர் சொல்லலாமா? மு.க.ஸ்டாலின் கேள்வி
சார்ந்த செய்திகள்
Next Story
புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Next Story
'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி
உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.