Published on 08/10/2022 | Edited on 08/10/2022

இமாச்சலப்பிரதேசம், குலு, மணாலியில் சர்வதேச தசரா திருவிழாவின் மூன்றாவது நாள் கொண்டாட்டம் களைக்கட்டியது. புகழ்பெற்ற சுற்றுலா மையமான குழுவில் 8,000- க்கும் மேற்பட்ட பெண்கள் கலாச்சார ஆடையில் பாரம்பரிய நடனத்தை ஆடினர்.
மூன்று சுற்றுக்களாக அரங்கேற்றப்பட்ட, இந்த பாராமரிய நடனத்தின் வாயிலாக தேர்தல் வாக்களிப்பதன் அவசியம், போதையில்லா சமூகத்தை உருவாக்குதல், பெண் கல்வி ஆகியவைக் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், ஏராளமான சுற்றுலா பயணிகளும் கலந்துக் கொண்டு நடனமாடி மகிழ்ந்தனர்.