Skip to main content

அசாம் போராட்டத்தில் வன்முறை - இருவர் பலி!

Published on 24/09/2021 | Edited on 25/09/2021

 

jkl

 

அசாமில் அரசுக்குச் சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புக்களை அகற்றும் போது ஏற்பட்ட வன்முறையில், இருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அசாமில் டர்ங் மாவட்டத்தில் உள்ள டோல்பூர் பகுதியில் அரசுக்குச் சொந்தமான 602.04 ஹெக்டேர் நிலம் உள்ளது. இதில் 800க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டுகளாக வசித்து வந்தனர். இதற்கிடையே இந்த இடத்தில் அரசின் திட்டத்தினை செயல்படுத்துவதற்காக அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா கடந்த சில வாரங்களுக்கு முன் அந்த இடத்தை பார்த்துவிட்டுச் சென்றார். அதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த இடத்தை காலி செய்ய வலியுறுத்தி அங்கிருப்பவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்படவில்லை.

 

இந்நிலையில், சில நாட்களாக வாகனங்களைக் கொண்டு வந்து அதிகாரிகள், ஆக்கிரமிப்புக்களை அகற்றத்தொடங்கினார்கள். இதில் பயந்த சில குடும்பத்தினர், அங்கிருந்து கிளம்பி வேறு இடத்திற்குச் சென்றனர். இந்நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வேண்டும், நிவாரணம் தர வேண்டும் எனக் கூறி அப்பகுதியில் வசித்து வரும் பொதுமக்களில் சிலர் போராட்டத்தில் குதித்தனர். காவல்துறை பேச்சுவார்த்தை நடத்தியும் கருத்தொற்றுமை ஏற்படாத நிலையில், அது தற்போது வன்முறையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் காவல்துறையினர் துப்பாக்கியால் சுட்டதில் இருவர் பலியானார்கள். இருந்தும், ஆக்கிரமிப்பை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

தேஜஸ்வி சூர்யா மீது வழக்குப்பதிவு

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Case registered against Tejaswi Surya

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவின் தெற்கு மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சமூக வலைத்தள பக்கமான எக்ஸ் வலைத்தள பக்கத்தில் மதரீதியாக வாக்கு சேகரிப்பது தொடர்பான வீடியோ ஒன்றை பாஜக வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா வெளியிட்டிருந்தார். இந்நிலையில் ஜெயநகர் போலீசார் அவர் மீது தற்போது வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கெனவே இன்று காலை மற்றொரு பாஜக வேட்பாளரான சுதாகர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.