Skip to main content

தலைக்கேறிய கஞ்சா போதை; இளம் பெண்களின் வைரல் வீடியோ

Published on 17/08/2023 | Edited on 17/08/2023

 

video of young women staggering around intoxicated is going viral

 

கர்நாடக - கேரள எல்லையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் புழக்கங்கள், நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை, பெரிதும் கேள்விக்குறியாகி உள்ளது. இந்நிலையில், இதனை ஒடுக்கும் நடவடிக்கையாக, போதைப் பொருள் தடுப்பு வேட்டையில், போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இதனால், அந்தந்த காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு, போதைப் பொருள் விற்பவர்களை அதிரடியாக கைது செய்து வருகின்றனர்

 

இத்தகைய சூழலில், கடந்த 10 ஆம் தேதியன்று கர்நாடக மாநிலம் மைசூருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு இளைஞர்கள் சிலர் தங்களுடைய தோழிகளுடன் வந்துள்ளனர். கேரளாவைச் சேர்ந்த அவர்கள் அங்குள்ள ஐடி நிறுவனத்தில் வேலை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. மேலும், குடி மற்றும் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இவர்கள், ஆண், பெண் எனத் தங்களுடைய நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கடி போதையில் தத்தளித்து வந்தனர். அந்த வகையில், மைசூருக்கு அருகில் உள்ள விவசாய நிலத்திற்கு வந்த நண்பர்கள் அனைவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர். அதுமட்டுமின்றி, அவர்கள் கஞ்சா போதையிலும் இருந்ததாகச் சொல்லப்படுகிறது.

 

இந்நிலையில், அவர்களுக்குப் போதை தலைக்கேறியதால் தாங்கள் என்ன செய்கிறோம் என்பதே தெரியாமல் அங்கும் இங்குமாய் தள்ளாடிக் கொண்டிருந்தனர். அந்த சமயம், அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த ஊர்மக்கள் இவர்களுடைய அலப்பறைகளை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும், இதைக் கேட்ட ஒருவரை அந்த இளைஞர்கள் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, உடனடியாக ஊர்மக்களை அழைத்து வந்து அங்கு போதையில் இருந்த இளைஞர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், இருதரப்பினர் இடையே தகராறு ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

 

இதனிடையே, அந்த கூட்டத்தில் இருந்த ஒருவர் போதையில் இருந்த இளைஞர்களையும் இளம்பெண்களையும் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த இளம்பெண்கள் தங்களுடைய முகத்தை மறைத்துக்கொண்டு அங்கிருந்து ஓட முயற்சித்தனர். ஆனால், அதிலிருந்த ஒரு இளம்பெண், தன்னால் எழுந்திருக்கக் கூட முடியாமல் அந்த வயல்வெளியிலேயே உருண்டு புரண்டார்.  அந்த சமயம், இளம்பெண்ணுடன் இருந்த சக நண்பர்கள் அந்த பெண்ணை அங்கிருந்து தூக்கிக்கொண்டு சென்றனர். ஒருகணம், இதைப் பார்த்து விழி பிதுங்கிய கிராம மக்கள் என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்துப் போனார்கள்.  

 

போதைப் பழக்கத்தில் ஆண்களுக்கு நிகராக பெண்களும் இத்தகைய செயலில் ஈடுபடுவது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனைத் தொடர்ந்து, போதை தலைக்கேறிய அந்த கோஷ்டிகளை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து விரட்டியடித்தனர். தற்போது, விவசாய நிலத்தில் இளைஞர்கள் சிலர் தங்களுடைய தோழிகளுடன் போதையில் திரியும் வீடியோ காட்சிகள் வெளியாகி, பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

9 ஆண்டுகளாக ஓட்டுப் போட முடியாமல் தவிக்கும் பெண்; காரணம் என்ன?

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Woman unable to vote for 9 years in kerala

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், மேற்கு வங்கம், திரிபுரா, மணிப்பூர் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தில் உள்ள 87 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

அந்த வகையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், திரைப்பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதே வேளையில், கடந்த 9 ஆண்டுகளாக கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வரும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரளா மாநிலம், ஷொர்ணாவூர் அருகே குருவாயூரப்பன் பகுதியைச் சேர்ந்தவர் உஷா (62). இவர் கடைசியாக, 2016ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது வாக்களித்துள்ளார். அப்போது, அவர் வாக்களித்தன் சான்றாக தேர்தல் ஆணையத்தின் சார்பாக அதிகாரிகள் அவருடைய ஆள்காட்டி விரலில் ‘மை’ வைத்துள்ளார்கள். வழக்கமாக அங்கு வைக்கப்படும் ‘மை’ சில நாட்களில் தானாகவே அழிந்துவிடும். ஆனால், உஷாவுக்கு நீண்ட நாட்களாகியும் அழியவில்லை. இதில் குழப்பமடைந்த உஷா, சோப்பு உள்ளிட்ட பல பொருட்களைப் பயன்படுத்தி மையை அழிக்க முயற்சி செய்துள்ளார். ஆனால், மை அழியவில்லை.

இதனையடுத்து, உஷா கடந்த 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் வாக்களிக்க சென்றுள்ளார். ஆனால், அவரது விரலில் மை இருப்பதைக் கண்ட அதிகாரிகள், அவருக்கு வாக்களிக்கும் அனுமதியை மறுத்துவிட்டனர். இதில் மனமுடைந்த உஷா, இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் தனது ஜனநாயக கடமையை ஆற்ற வாக்குச்சாவடிக்கு சென்றுள்ளார். ஆனால், இப்போதும் அவரது விரலில் மை இருப்பதால் அவர் வாக்கை செலுத்த முடியாமல் ஏமாற்றத்துடன் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார். 

Next Story

“தாமரை மலர வேண்டும்” - கீர்த்தி சுரேஷின் தாயார்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
keerthy suresh mother menaka said bjp will win in election 2024

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் மொத்தம் 7 கட்டங்களாக நடக்கும் நிலையில் முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 19ஆம் தேதி தமிழகம் உட்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகளில் நடந்தது. இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று 13 மாநிலங்களில் மொத்தம் 89 தொகுதிகளில் நடந்து வருகிறது. 

காலை 7 மணி முதல் வாக்குப் பதிவு தொடங்கிய நிலையில் வாக்காளர்கள் அனைவரும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். கேரளாவில் மோலிவுட் திரைபிரபலங்கள் ஃபகத் ஃபாசில், டோவினோ தாம்ஸ், மம்மூட்டி, பார்வதி உள்ளிட்ட திரை பிரபலங்கள் வாக்களித்தனர். மேலும் நடிகையும் கீர்த்தி சுரேஷின் தாயாருமான மேனகா சுரேஷ் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எந்த ஒரு விஷயத்திலும் மாற்றம் இருந்தால் தான் அது நல்லா இருக்கும். கடந்த 15 வருடத்தில் திருவனந்தபுரத்தில் எந்த மாதிரியான ஆட்சி நடைபெற்று வருகிறது என்பது எல்லாருக்கும் தெரியும். 

அதிலிருந்து ஒரு புதிய ஆட்சி வந்தால் நல்லா இருக்கும். அப்போது தான் நமக்கு மாற்றங்கள் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்பது தெரியும். தாமரை மலர வேண்டும். அது என் ஆசை. கேரளாவில் பிஜேபி வந்ததேயில்லை. எல்டிஎப், யூடிஎப் இவர்களைத் தாண்டி ஒரு மாற்றம் வந்தால் நல்லா இருக்கும். பத்து தடவை கீழே விழுந்தால் பதினொறாவது முறை எழுவது இல்லையா. அதனால் மாற்றம் வரும். அந்த நம்பிக்கை இருக்கு. கேரளாவில் தாமரை மலர அதிக வாய்ப்பிருக்கு. சுரேஷ் கோபி கண்டிப்பாக ஜெயிப்பார்” என்றார்.