Skip to main content

நோட்டெல்லாம் போதும், கிரெடிட் கார்டுதான் வாழும்? -இந்தியாவில் மேஸ்ட்ரோ கார்டுகள்  

Published on 30/07/2018 | Edited on 30/07/2018
credit card

 

2016 நவம்பர் 8ஆம் தேதி மத்திய அரசு 500 மற்றும் 1000 ரூபாய் தாள்கள் செல்லாது என்று அறிவித்தது. அதற்கு பதிலாக வெளியிடப்பட்ட புதிய 2000 மற்றும் 500 ரூபாய்களும் போதிய அளவில் புழக்கத்தில் வராததால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளானார்கள். இந்தத்  தட்டுப்பாடைக் குறைக்க மத்தியஅரசு, மக்களை பணமில்லா பரிவர்தனையை நோக்கி நகரச் சொல்லியது. அதன் மூலம் பொட்டிக்கடை முதல் பல்பொருள் அங்காடி வரை அனைவரும் ஸ்வைப்பிங் எந்திரத்தை வாங்கினார். பிறகு வெகுஜனம் மக்கள் பணமில்லா பரிவர்த்தனையை பின்பற்றத் தொடங்கினார்.

 

தற்போது மேஸ்ட்ரோ கார்டு நிறுவனம் 2019 ஆண்டுக்குள் 16.25 பில்லியன் ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய திட்டமிட்டு இருந்தது. அதில் 75% முதலீடை இது வரை அந்நிறுவனம் இந்தியாவில் செய்திருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் குஜராத் மாநிலத்தில் வதோதரா  என்னும் பகுதியில் தொழில்நுட்ப மையத்தைத் திறந்தது. மொத்த உலகின் 14% தொழிலாளர்கள் இந்தியாவில் மட்டும் உள்ளது குறிப்பிடதக்கது

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் மாநாட்டிற்கான பொது அழைப்பு (படங்கள்)

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் 13-வது உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு வரும் ஜூன் மாதம் 7,8,9 நாட்களில் சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் நடைபெறுகிறது. ‘தி ரைஸ் எழுமின்’ அமைப்பு நடத்தும் ‘தி ரைஸ் டாவோஸ்’ மாநாட்டில் பங்கேற்றுப் பயன்பெற விரும்புவோர் www.tamilrise.org என்ற இணைய தளம் வழியாகவோ, +91 9150060032, +91 9150060035 எண்களுக்குத் தொடர்பு கொண்டோ பதிவு செய்யலாம். இம்மாதம் 31-ம் தேதிக்குள் பதிவு செய்பவர்களுக்கு 30% பதிவுக் கட்டணச் சலுகை தரப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. டாவோஸ் மாநாட்டிற்கான பொது அழைப்பு இன்று (06-03-24) வெளியிடப்பட்டது. இச்சந்திப்பில் 'தி ரைஸ்' அமைப்பின் நிறுவனர் தமிழ்ப் பணி ம. ஜெகத் கஸ்பர், அனைத்துலகத் தமிழ்ப் பொறியாளர் பேரவைத் தலைவர் திரு. கிருஷ்ணா ஜெகன், உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Next Story

தமிழகத்தில் கால் பதிக்கும் 'அடிடாஸ்'

Published on 04/01/2024 | Edited on 04/01/2024
 'Adidas' to set foot in Tamil Nadu

தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு தமிழக அரசு கவனம் செலுத்தி வருகிறது. அந்த வகையில், உலக முதலீட்டாளர்கள் மாநாடு சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறவிருக்கிறது. இந்த மாநாட்டிற்கான இலச்சினையை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

வரும் ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்த மாநாட்டில் தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து ஏராளமான தொழிலதிபர்கள் பங்கேற்க இருக்கிறார்கள். மேலும், பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளது. இந்த மாநாட்டையொட்டி சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அரங்கங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான ஆயத்தப்பணிகளை தற்போது தமிழக தொழில்துறை செய்து வருகிறது.

இந்நிலையில், பிரபல நிறுவனமான 'அடிடாஸ்' முதல் முறையாக தமிழகத்தில் சென்னையில் கால்பதிக்க இருக்கிறது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் சென்னையில் நடக்கும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் கையெழுத்தாக உள்ளது. சீனாவுக்கு பிறகு அடிடாஸ் நிறுவனம் ஆசியாவிலேயே இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் கால்பதிக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.