Skip to main content

அதிகரிக்கும் ஒமிக்ரான்; மத்திய, மாநில சுகாதாரத்துறை அமைச்சர்கள் ஆலோசனை!

Published on 02/01/2022 | Edited on 02/01/2022

 

'Omicron' - Union Health Minister advised!

 

நாடு முழுவதும் ஒமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், டெல்லியில் இருந்து இன்று (02/01/2022) பிற்பகல் 03.30 மணியளவில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா மாநில அமைச்சர்களுடன் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, தெலங்கானா, ஆந்திரா, ஒடிஷா, பீகார், மேற்கு வங்கம், ஹரியானா, புதுச்சேரி, டெல்லி, நாகலாந்து உள்ளிட்ட மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

 

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ். வளாகத்தில் இருந்து தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காணொளி மூலம் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டனர். 

 

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில அரசுகள் எடுத்து வரும் கரோனா மற்றும் ஒமிக்ரான் தடுப்பு நடவடிக்கைகள், கட்டுப்பாடுகளை விதிப்பது, நோய்த்தொற்று விகிதம், தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள், சிறார்களுக்கு தடுப்பூசிப் போடும் பணிகள், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடுவது உள்ளிட்டவைக் குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார். 

 

மேலும், மருத்துவமனைகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ள படுக்கைகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், வெண்டிலெட்டர்கள் உள்ளிட்டவைக் குறித்தும், அமைச்சர் கேட்டறிந்து வருவதாக தகவல் கூறுகின்றன. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆன்லைன் விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி உரையாடல்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
PM Modi's conversation with online sportspersons

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இந்நிலையில் டெல்லியில் நாட்டின் முன்னணி ஆன்லைன் கேமர்களுடன் (வீரர்கள்) பிரதமர் மோடி இன்று (13.04.2024) கலந்துரையாடினார். இந்தியாவில் கேமிங் துறை வளர்ந்து வரும் துறையாக உள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஆன்லைன் கேமிங்கில் பெண்களின் பங்களிப்பு குறித்தும் பிரதமர் மோடி கலந்துரையாடியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கலந்துரையாடலில் 7 ஆன்லைன் கேமர்கள் கலந்துகொண்டனர்.

இது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் 30 நிமிடங்கள் ஓடக் கூடிய வீடியோவுடன் வெளியிட்டுள்ள பதிவில், “கேமிங் துறையைச் சேர்ந்த இளைஞர்களுடன் அற்புதமான உரையாடலை மேற்கொண்டேன். நீங்கள் இந்த வீடியோவைப் பார்க்க விரும்புவீர்கள் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை

Published on 16/08/2023 | Edited on 16/08/2023

 

Chief Minister M.K.Stal's advice on development projects

 

தமிழ்நாட்டில் மத்திய அரசு பங்களிப்புடன் பல்வேறு துறைகளில் செயல்படுத்தி வரும் திட்டங்களை உரிய காலத்தில் நிறைவேற்றிட வளர்ச்சித் திட்டப் பணிகளை மாநில அளவில் கண்காணிக்கக் கூடிய, வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், ஜல் ஜீவன் திட்டம், அனைவருக்கும் கல்வி மற்றும் தொழிலாளர் நலத்திட்டங்கள் மற்றும் மாநில அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

 

இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் ஐ. பெரியசாமி, கே.என். நேரு, மா. சுப்பிரமணியன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், உதயநிதி ஸ்டாலின், வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவில் உறுப்பினராக இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.ஆர். பாலு, எஸ்.எஸ். பழனிமாணிக்கம், திருநாவுக்கரசர், தொல். திருமாவளவன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டுள்ளனர்.