Skip to main content

“பணம் இல்லாத வீட்டை ஏன் சார் பூட்டிட்டுப் போறீங்க?”- துணை ஆட்சியர் வீட்டில் கடிதம் எழுதி வைத்துச் சென்ற திருடன்!

Published on 12/10/2021 | Edited on 12/10/2021

 

thief wrote a letter and in the sub collector house while he went for theft

 

மத்தியப் பிரதேச மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்று தேவாஸ். தேவாஸ் மாவட்டத்தில் உள்ள சிவில் லைன்ஸில் இருக்கிறது அரசு அதிகாரிகளுக்கான குடியிருப்பு. இங்குதான் தேவாஸ் மாவட்டத்தின் துணை ஆட்சியரான திரிலோச்சன் கவுருக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. திரிலோச்சன் கவுரின் மனைவி ரத்லம் மாவட்டத்தில் மாஜிஸ்திரேட்டாக பணிபுரிகிறார். அரசு அதிகாரிகளின் குவாட்ரஸ் என்பதால் அங்கு பாதுகாப்புக்குக் குறைவே கிடையாது. ஆனால், துணை கலெக்டர் திரிலோச்சன் கவுரும் அவரது மனைவியும் அலுவல் நிமித்தமாக வார இறுதி நாட்களில் தான் வீட்டுக்கு வருவார்கள். இதை நோட்டமிட்ட ஒருவர் எப்படியோ அத்தனை பாதுகாப்புகளையும் மீறி உள்ளே நுழைந்துள்ளார்.

 

அரசு அதிகாரிகளின் வீடு என்பதால் மொத்தமாகச் சுருட்டலாம் எனும் கனவில் வீட்டுக்குள்ளே நுழைந்துள்ளார். ஆனால், மிகச் சொற்ப அளவிலான பணமும் நகையும் கிடைக்கவே ஏமாந்து போயுள்ளார். அத்துடன் அரசு அதிகாரி பயன்படுத்தும் நோட் பேடில், “பணம் இல்லாத வீட்டை ஏன் சார் பூட்டிட்டுப் போறீங்க?”என ஒரு கடிதத்தை எழுதி இறுதியில் கையெழுத்தும் போட்டுவிட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று வீட்டுக்கு வந்த திரிலோச்சன் கவுரும் அவரது மனைவியும் வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். அத்துடன், சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணமும் நகைகளும் களவு போயிருந்தன. உடன் திருடன் கைப்பட எழுதி விட்டுச் சென்றிருந்த கடிதமும் கிடந்தது. அதே குவாட்ரசில்தான் இந்த மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரிகளின் வீடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

 

thief wrote a letter and in the sub collector house while he went for theft

 

உடனே, இந்தச் சம்பவம் குறித்து, துணை கலெக்டர் திரிலோச்சன் கவுர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். புகார் குறித்து பத்திரிகையாளரிடம் கூறிய போலீஸ் அதிகாரி உம்ராவ் சிங், “அதிகாரி திருலோச்சன் கவுரும் அவரது மனைவியும் செப்டம்பர் 20 அன்று வேலை நிமித்தமாக வெளியில் சென்றுள்ளனர். கடந்த அக்டோபர் 9 அன்று தங்கள் இல்லத்திற்குத் திரும்பியுள்ளனர். அப்போது, சுமார் 30,000 ரூபாய் ரொக்கமும் சில நகைகளும் திருலோச்சன் கவுரின் வீட்டில் இருந்து திருடப்பட்டுள்ளதாகப் புகார் கூறியுள்ளனர். கடிதம் எழுதுவதற்காக, அரசு அதிகாரியின் நோட்பேடு மற்றும் பேனாவை திருடன் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறோம். குற்றவாளியை விரைந்து கண்டுபிடிப்போம்” இவ்வாறு கூறினார்.

 

பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்கும் அரசு அதிகாரிகளின் குவாட்ரஸுக்குள் நுழைந்து திருடியதோடு மட்டுமல்லாமல், பணம் பத்தவில்லை எனத் துணை கலெக்டருக்கே கடிதம் எழுதிவைத்துவிட்டுச் சென்றது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றவரை சிறுநீர் குடிக்க வைத்த கொடூரம்!

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
The forcing a man to drink urine for eloping with married woman

திருமணமான பெண்ணுடன் தப்பிச் சென்றுடன் ஒருவரை, கிராம மக்கள் அடித்து துன்புறுத்தி, கட்டாயப்படுத்தி சிறுநீர் குடிக்க வைத்து, காலணி மாலை அணிவித்து ஊர்வலம் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மத்திய பிரதேசம் மாநிலம், உஜ்ஜைன் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட நபர், திருமணமான பெண்ணுடன் ஊரைவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இந்த தகவல் கிராமம் முழுவதும் பரவிய நிலையில், ராஜஸ்தான் மாநிலத்திற்கு சென்ற அவர்களைப் பிடித்து கிராம மக்கள் தங்கள் கிராமத்திற்கு அழைத்து வந்து கொடுமைப்படுத்திய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

இது தொடர்பான வீடியோவில், பாதிக்கப்பட்ட நபரது தலைமுடி மற்றும் மீசையின் சில பகுதிகள் மொட்டையடிக்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த இளைஞரை மரத்தில் கட்டி வைத்து செருப்பு மாலை அணிவித்து கிராம மக்கள் தாக்கியுள்ளனர். அவரை வலுக்கட்டாயமாக பாட்டிலில் இருந்து சிறுநீரை குடிக்க வைத்து கொடுமைப்படுத்தியுள்ளனர். அவருடன் தப்பிச் சென்ற பெண்ணையும் தாக்கி கொடுமைப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

இது குறித்து போலீசார் கூறுகையில், ‘வீடியோக்கள் காவல்துறையின் கவனத்திற்கு வந்த பிறகு, நாங்கள் பாதிக்கப்பட்டவரின் வீட்டை முன்கூட்டியே தொடர்பு கொண்டோம், ஆனால் அவர் அங்கு இல்லை. பாதிக்கப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசினேன். அவர் எங்களை சந்திப்பார். குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் சம்பவம் நடந்த இடத்தை சரிபார்த்த பிறகு, சட்ட நடவடிக்கை தொடங்கப்படும். சம்பவத்தின் பின்னணி குறித்து இன்னும் தெளிவாக இல்லை. பாதிக்கப்பட்டவருடன் பேசிய பிறகு உறுதி செய்யப்படும் என்று’ என்று கூறினர்.